ஆரணியில் துணி துவைத்து கொண்டிருந்த பெண்! பின்னாடியே போன பாஜக பிரமுகர்! அடுத்து என்ன நடந்தது தெரியுமா

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பாஜக நகர நிர்வாகி மதுபோதையில் இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார்.. உயிர் பயத்தில் மாடியில் இருந்து குதித்த இளம்பெண் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.. நடந்ததை அறிந்த கடைக்காரர்கள் குற்றவாளியை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.. அப்படியென்ன நடந்தது ஆரணியில்?

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு பகுதியை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண்.. திருமணமாகி கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.. நேற்றுமுன்தினம் காலை இவரது கணவர் கூலி வேலைக்கு சென்றுவிட்டார்.. வீட்டின் வெளிப்புற கேட்டை பூட்டிவிட்டு மேல்மாடியில் துணி துவைத்துக்கொண்டிருந்தார்..

BJP Leader Arrested Tamil Nadu Arani Crime News Tiruvannamalai Sexual Harassment Case

ஆரணி பாஜக பிரமுகர்

அப்போது ஆரணி விடிஎஸ் தெருவை சேர்ந்த பாஜக நகர நிர்வாகியான தர் வயது 33, வீட்டின் வெளிப்புற கேட் மீது எகிறி குதித்து மாடிக்கு சென்றார்.. துணி துவைத்துக்கொண்டிருந்த இளம்பெண் அருகே சென்று தனது ஆசைக்கு இணங்கும்படி கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார்.. இளம்பெண் கண்டித்து எச்சரித்தும் தர் பின்வாங்கவில்லை..

உயிர் பயத்தில் கத்தி கூச்சலிட்டபடி மேல்மாடியில் இருந்து பால்கனி வழியாக கீழே உள்ள கடைகளின் தகர கூரை மீது குதித்தார்.. லேசான காயங்களுடன் இளம்பெண் உயிர் தப்பினார்..

உயிருக்கு பயந்து மாடியிலிருந்து..

சத்தம் கேட்டு ஓடி வந்த கடைக்காரர்கள் இளம்பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.. நடந்தது என்னவென்று கேட்டறிந்த அவர்கள், மதுபோதையில் வீட்டிற்குள் இருந்த தரை பிடித்து தர்ம அடி கொடுத்து ஆரணி நகர போலீசில் ஒப்படைத்தனர்..

போலீசார் விசாரணையில் இன்னும் பல தகவல்கள் வெளிவந்தன.. கடந்த சில நாட்களுக்கு முன்பே தர், கடைக்கு சென்று வரும்போது இளம்பெண்ணை வழிமறித்து தகராறு செய்து அத்துமீற முயன்றுள்ளார்.

தூக்கிய ஆரணி போலீஸ்

இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்தபோது கணவரை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.. இதை அறிந்த குடும்பத்தினர் தரை கண்டித்தபோது மன்னிப்பு கேட்டதும் விசாரணையில் தெரியவந்தது.. கைது செய்யப்பட்ட தருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிரிந்து சென்றுவிட்டதாகவும் தெரியவந்தது..

போலீசார் வழக்குப்பதிவு செய்து தரை கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.. வீட்டின் கதவை பூட்டிய நிலையிலும் கேட்டை தாண்டி உள்ளே நுழைந்து தொல்லை கொடுக்கும் துணிச்சல் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.. இதற்கு விடை கிடைக்க வேண்டுமானால், இதுபோன்ற வழக்குகளில் கடுமையான தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும்.. அது ஒன்றுதான் ஒரே வழி..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+