திருவண்ணாமலையில் நேரடியாக களம் இறங்கிய கலெக்டர்.. ஆக்கிரமிப்புகள் அதிரடியாக இடித்து அகற்றம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கோலாகலமாக நடந்தேறும் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் . எனவே கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும், பக்தர்கள் தங்குதடையின்றி மாடவீதிகளிலும், கிரிவலப் பாதையிலும் செல்ல வசதியாகவும், நடைபாதை ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. கலெக்டரே ஆக்கிரமிப்புகளை அகற்ற நேரடியாக களம் இறங்கினார்.
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை தீபத் திருவிழா, தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. விழாவின் மிக முக்கியமான நிகழ்வுகளான, ஆறாம் நாள் உற்சவத்தில் வெள்ளி ரதம், ஏழாம் நாள் விழாவில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டமும் நடைபெறவுள்ளன. இந்த நாட்களிலேயே மாடவீதிகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

இந்த வருட திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான, பரணி தீபம் மற்றும் மாலையில் மலையின் உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் நிகழ்வு, வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது. அன்று மட்டும், சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கிறது.
மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கை
இந்த பெரும் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, பக்தர்கள் பாதுகாப்பாகவும், சௌகரியமாகவும் தரிசனம் செய்து, கிரிவலம் செல்லவும் ஏதுவாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜின் நேரடி மேற்பார்வையில், நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டனர்.
மாடவீதிகளில் நடைபாதை கடைகள், தள்ளுவண்டி கடைகள், மேற்கூரைகள் என ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த அனைத்தையும், எவ்வித பாரபட்சமும் இன்றி பொக்லைன் எந்திரங்கள் கொண்டு அகற்றினர். அதேபோல், சுமார் 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையிலும் நடைபாதைகளை ஆக்கிரமித்திருந்த அனைத்து தற்காலிக மற்றும் நிரந்தரக் கடைகளும் அகற்றப்பட்டன.
இனிவரும் நாட்களில், மீண்டும் ஆக்கிரமிப்புகள் வைத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை ஆட்சியர் தர்ப்பகராஜ் அவர்கள் கண்டிப்பான எச்சரிக்கை விடுத்துள்ளார். பக்தர்களின் நலனுக்காகவும், பொது அமைதிக்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கையின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், கோவில் இணை ஆணையர் பரணிதரன், மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி உள்ளிட்ட பல துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications