"ராஜ்பவன்" ஆர்எஸ்எஸ் ஆபீஸ்.. "ஒரே சாதி " என்று பாஜகவை சொல்ல சொல்லுங்க பார்ப்போம்.. கி.வீரமணி சுளீர்
திராவிடர் கழக கி.வீரமணி பாஜகவை சரமாரி விமர்சித்து பேசியுள்ளார்
திருவண்ணாமலை: தமிழகத்தில் உள்ள ராஜ்பவன் அலுவலகம் தற்பொழுது ஆர்எஸ்எஸ் அலுவலகமாக மாறிக் கொண்டு வருகிறது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்
திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயணக் பொதுக் கூட்டம் கடந்த 3ம் தேதி நாகர்கோவிலில் தொடங்கி 25ம் தேதி சென்னையில் முடிவடைகிறது.
தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்வி கொள்கை, உழைக்கும் மக்களுக்கு எதிராக மாநில உரிமைகளை பறிக்க கூடாது என்ற 3 முக்கிய பிரச்சனைகளை வலியுறுத்தி இந்த பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.. காஞ்சிபுரம், விழுப்புரம் என ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் பாஜகவை சரமாரியாக விமர்சித்து வருகிறார் கி.வீரமணி... குறிப்பாக காஞ்சிபுரம் கூட்டத்தில் வீரமணி பேசியதாவது:

பார்ப்பனர்கள்
"திராவிட மாடல் என்றால் பெண்கள் கையில் பதவி இருப்பது தான். ஆனால் அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று பேசி வருவது தான் பாஜக.. பார்ப்பனர்கள் தனக்கு கீழே இருக்கும் ஜாதிகளை அவர்கள் யாரும் படிக்கக் கூடாது, படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்த வேண்டும், அத்துமீறி படித்தால் கடுமையான தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் தான் இந்த பார்ப்பனர்கள்.. நூறு வருடம் ஆனாலும் சரி, பாஜக கட்சியால் தமிழகத்தில் காலூன்ற முடியாது. திராவிட கட்சிகள் மட்டுமே தமிழகத்தை ஆட்சி செய்ய முடியும்" என்றார்.

ஒரே சாதி
அந்த வகையில், திருவண்ணாமலையிலும், இந்த பொதுக்கூட்டம் நடந்துள்ளது.. அப்போது கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.. அவர் பேசும்போது: மக்களுக்கு தெளிவு ஏற்படுத்துவதற்காக தான் இந்த சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். இந்தியாவில் ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே கல்விக்கொள்கை, ஒரே தேர்தல் என்று சொல்லிவரும் பாஜக ஒரே சாதி என்று சொல்ல முடியுமா?

குட்டிகரணம்
இப்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் அனைத்தும் வெளிப்படையாக செய்கிறார்கள்.. தமிழகத்தில் பாஜக எவ்வளவு கரணம் போட்டாலும் வெளியே வர முடியாது. பாஜக குத்தகைக்கு போனதால் மட்டுமே 4 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.. இது தொடர்பாக அனைத்து தேர்தல் முடிவுகள் சொல்லும்.. திமுக என்பது வெற்றிடம் இல்லை.. தமிழ்நாட்டில் அனைவரும் கற்றுக் கொள்ளக் கூடிய கற்றிடம்.. மேலும், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது..

ஆர்எஸ்எஸ்
தமிழ் வருடப் பிறப்பில் வருகின்ற 60 வருடங்களில் ஏதேனும் ஒரு தமிழ் வருடம் உள்ளதா? ராஜ்பவனில் நடைபெற்ற விருந்து என்பது வழக்கத்திற்கு மாறாக நடைபெற்ற விருந்து.. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழகத்தில் உள்ள ராஜ்பவன் அலுவலகம் தற்பொழுது ஆர்எஸ்எஸ் அலுவலமாக மாறிக் கொண்டு வருகிறது. உலகம் பார்த்து வியக்கும் அளவிற்கு தமிழக முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார்.. இதனை பாஜக குறுக்குசால் ஓட்டி பார்த்தால் மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்" என்றார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications