துடித்துப்போன கேபிஒய் பாலா.. திருவண்ணாமலை நிலச்சரிவில் இறந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். இன்று கேபிஒய் பாலா திருவண்ணாமலை வஉசி நகருக்கு சென்று இறந்தவர்களின் போட்டோவுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியதோடு ரூ.2 லட்சம் வழங்கினார்.
பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை கொட்டியது. சென்னையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

இதனால் வெள்ளம் ஏற்பட்டது. திருவண்ணாமலையில் கனமழையின் காரணமாக திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. திருவண்ணாமலை வஉசி நகர் பகுதியில் கடந்த 1ம் தேதி தீபம் ஏற்றும் மலை பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
வீடுகள் மண்ணில் புதைந்தன. ராஜ்குமார் என்பவர் வீட்டில் இருந்த 7 பேர் நிலச்சரிவில் சிக்கினர். ராஜ்குமார், அவரது மனைவி மீனா மற்றும் குழந்தைகள் கவுதம், வினியா, மகா, தேவிகா, வினோதினி ஆகியோர் மண் சரிவில் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணி தொடங்கி நடந்தது.
மழை மற்றும் மின்தடை உள்ளிட்டவற்றால் மீட்பு பணி தாமதமானது. நிலச்சரிவில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க முடியாததால் அவர்கள் இறந்தனர். மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டது. 3 நாள் மீட்பு பணிக்கு பிறகு அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டது.
இந்நிலையில் தான் திருவண்ணாமலை நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை கேபிஒய் பாலா இன்று நேரில் சென்று பார்த்தார். அதன்பிறகு நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினரை கேபிஒய் பாலா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இறந்தவர்களின் போட்டோவுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இறந்தவர்கள் சேர்ந்த 4 குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் என்று மொத்தம் ரூ.2 லட்சத்தை கேபிஒய் பாலா வழங்கி உதவி செய்தார்.
முன்னதாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருவண்ணாமலை வ.உ.சி நகரில் மண் சரிவில் சிக்கி பலியான 7 பேரின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார். இறந்தவர்களின் போட்டோவுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கினார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications