திருவண்ணாமலை மகாதீபம்.. பார்க்கிங், கூட்டம் எங்கு அதிகம்? பக்தர்களுக்கு உதவும் கார்த்திகை தீபம் செயலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பக்தர்களின் வசதிக்காக கார்த்திகை தீபம் என்ற புதிய செயலியை மாவட்ட நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலமாக பக்தர்கள் பார்க்கிங் வசதி, தற்காலிக பேருந்து நிலையம், கூட்டம் அதிகமிருக்கும் இடங்கள், மருத்துவ முகாம், கூகுள் மேப், 14 கிமீ கொண்ட கிரிவலப் பாதை உள்ளிட்ட விவரங்கள் குறித்த தகவல்களை உடனடியாக அறிய முடியும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை ஏற்றப்பட்ட பரணி தீபத்தை காணவே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதையடுத்து மகா தீபம் மாலையில் 2,668 உயரத்தில் ஏற்றப்பட உள்ளது.

இந்த மகா தீபத்தை காண்பதற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர். இதனால் அண்ணாமலையார் கோயிலில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகள் பாதுகாப்புக்காக அவர்களின் கைகளில் ஒரு ஸ்டாம்ப் வாட்ச் கட்டப்படுகிறது.
அதில் குழந்தை மற்றும் பெற்றோர் விவரங்களை போலீசார் எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டிவிடுகின்றனர். அதேபோல் திருவண்ணாமலை வரும் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பிரத்யேக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த செயலியின் மூலமாக கோயில் வரைபடம், கூட்ட நெரிசல் அதிகமுள்ள பகுதிகள், தற்காலிக பேருந்து நிலையங்களை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
அதேபோல் இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களில் வரும் மக்களுக்கான பார்க்கிங் வசதி எங்கு உள்ளது, மருத்துவ முகாம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது, ஆம்புலன்ஸ் வசதி எங்கெலாம் உள்ளது என்பனவற்றையும் தெரிந்து கொள்ளலாம். அதேபோல் தண்ணீர் வசதி, கிரிவலப் பாதையான 14 கிமீ தூரம் வரை செய்யப்பட்டுள்ள வசதிகளையும் தெரிந்து கொள்ள முடியும்.
அதுமட்டுமல்லாமல் கோயிலில் இருந்து வெளியேற விரும்புவோருக்காக கூகுள் மேப்பை இணைக்கப்பட்டு அந்த செயலியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் தொடர்பான பாதைகள், கோயிலுக்கு செல்லும் வழிகள் குறித்தும் செயலியில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் கார்த்திகை தீபம் 2025 செயலி பதிவிறக்கம் செய்தால், பல்வேறு சிக்கல்களை பக்தர்களால் தவிர்க்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications