"அந்தரங்கம்".. சார், வாயை தொறந்தாலே ஆபாசம்.. நைட் வீடியோ கால்.. கிளாஸ்ரூமுக்குள்ளேயே நுழைந்த "ஜனம்"
வீடியோகால் மூலம் ஆபாச தொல்லைகள் தந்த வந்தவாசி ஆசிரியர் கைதாகி உள்ளார்
திருவண்ணாமலை: ஆசிரியரின் பாலியல் தொல்லைகளை கேள்விப்பட்டு, நேரடியாக கிளாஸ்ரூமுக்குள்ளேயே ஆவேசமாக புகுந்துவிட்டார்கள்.. அங்கேயே அந்த அறிவியில் ஆசிரியரை வெளுத்தெடுத்துள்ளனர்.
பள்ளி மாணவிகள் பல இடங்களில் பாலியல் தொல்லைகளை சந்தித்து வருவது அதிகமாகிவிட்டது.. நடந்து வரும் சம்பவங்கள் எல்லாம் மிகவும் வேதனை அளிப்பதாக கல்வி அதிகாரிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவித்து வருகிறார்கள்..
ஆசிரியர்கள்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், இவர்களை வழிநடத்தக்கூடிய தலைமை ஆசிரியர்களே பாலியல் அத்துமீறில்களில் நடந்து கொள்வது அதிர்ச்சியை தந்து வருகிறது.

பிராக்டிக்கல்
தினமும் ஏதாவது ஒரு ஆசிரியர், பாலியல் புகாரில் கைதாவதும் தொடர்கதையாகி வருகிறது... இன்னொரு ஆசிரியரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிக்கி உள்ளார்.. வந்தவாசி அருகே உள்ள சாலவேடு அரசு உயர்நிலைப்பள்ளியில், 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகிறார்கள்.. இங்கு, அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பரணி.. 57 வயசாகிறது.. இவர் அறிவியல் பாடம் எடுப்பதால், பிராக்டிக்கல் அதாவது செய்முறை தேர்வு குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க 'வேண்டிய தேவை உள்ளது. எனவே, இதற்காகவே ஒரு வாட்ஸ் ஆப் க்ரூப் ஒன்றினை அமைத்துள்ளார்.

வாட்ஸ்அப் குரூப்
இந்த வாட்ஸ்அப் க்ரூப்பில், 10-ம் வகுப்பு மாணவ, மாணவியர் மட்டுமே உள்ளனர்... அதில் உள்ள மாணவியர் சிலருக்கு, பரணி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். திடீரென வீடியோ கால் செய்வாராம்.. அதுவும் நைட் நேரத்தில் மட்டுமே வீடியோ கால் செய்வாராம்.. இரவு நேரங்களில் வீடியோ காலில் வரும்படி மாணவிகளை அச்சுறுத்தியுள்ளார். வாட்ஸ்அப் காலில் மாணவிகளிடம் மிக ஆபாசமாகவும் பேசி வந்துள்ளார்.. ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல், அந்த மாணவிகள், தங்கள் பெற்றோர்களிடம் இதை பற்றி கண்ணீருடன் கூறியுள்ளனர்..

கிளாஸ்ரூமுக்குள்
இதைக்கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர்கள், உறவினர்களுடன், அந்த பள்ளிக்கே கிளம்பி சென்றுவிட்டனர். விஷயத்தை கேள்விப்பட்டு அந்த பகுதி மக்களும் பள்ளிக்கு திரண்டு வந்தனர்.. ஒட்டுமொத்தபேரும், பரணி இருந்து அந்த கிளாஸ்ரூமுக்குள் நுழைந்து, அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்... அதற்குள் பள்ளியில் இருந்த மற்ற ஆசிரியர்கள் ஓடிவந்து, பரணியை விடுவித்தனர்.. இதையடுத்து, பரணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெற்றோர் மற்றும் பொதுமக்கள், அரசு பள்ளி முன் முற்றுகையிட்டு போராட்டத்திலும் குதித்தனர்.. அதற்குள் தகவலறிந்த, கீழ்கொடுங்காலுார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பெற்றோரிடம் பேச்சு நடத்தினர்.. ஆசிரியர் பரணியை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தும் வருகிறார்கள்..

நயினார் கோயில்
4 நாளைக்கு முன்புதான், ஒரு தலைமை ஆசிரியர் கைதானார். ராமநாதபுரம் மாவட்டம், நயினார் கோவில் அருகே சிறுவயல் அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்.. ஜூலியஸ் ரவிச்சந்திரன் என்பது அவர் பெயர்.. 56 வயதாகிறது.. திருநெல்வேலியை சேர்ந்தவராம்.. ஒன்பதாம் வகுப்பு மாணவிகளை மட்டுமே டார்கெட் செய்து, பாலியல் சீண்டல் செய்து வந்துள்ளார்.. இவருக்கு ஆங்கில ஆசிரியர் ஜெயபால் என்பவரும் உடந்தையாக இருந்து வந்துள்ளார்.. கடைசியில், தலைமை ஆசிரியர் ஜூலியஸ் ரவிச்சந்திரன், ஜெயபால் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி, ஒட்டுமொத்த கிராம மக்களும், ஒன்றுதிரண்டு, நேரடியாக கலெக்டரிமே சென்றுவிட்டார்கள்..

ஈஸி ஜாமீன்
அதற்கு பிறகுதான் குற்றச்சாட்டு நிரூபணமாகி அந்த தலைமை ஆசிரியரை போக்சோவில் கைது செய்தார்கள்.. இதில் என்ன ஒரு கொடுமை என்றால், இந்த தலைமை ஆசிரியர், ஏற்கனவே, இதே குற்றச்சாட்டுக்காக கடந்த 2018ல் திருநெல்வேலியில், போக்சோவில் கைதானவராம்.. ஜாமீனில் வந்து மறுபடியும், வேலையை காட்டி உள்ளார்.. போக்சோ சட்டத்தில் கைதாகி, எளிதாக ஜாமீனையும் பெற்று விடுவதால், போக்சோவை இன்னும் கடுமையாக்க வேண்டி உள்ளது.. இவர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பது ஒருபக்கம் இருந்தாலும், பெண் குழந்தைகளை சீண்டும் இதுபோன்றவர்களை, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க, அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டி அவசியம் இங்கு ஏற்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications