Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

7 விவசாயிகளை குண்டாஸில் கைது செய்தது ஏன்? எதிர்ப்புக்கு நடுவே திருவண்ணாமலை காவல் துறை பரபர விளக்கம்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சிப்காட் எதிர்ப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் குண்டர் சட்டத்தில் 7 பேரும் கைது செய்யப்பட்டது ஏன்? என்பது பற்றி போலீசார் பரபரப்பான விளக்கம் அளித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்கத்துக்கு 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த ஆட்சி காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்பிறகு பணிகள் தொடங்கியது. இதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Why were 7 farmers who protested against Sipcot project in Thiruvannamalai arrested under Goonda Act?

இருப்பினும் மேல்மா சிப்காட் விரிவாக்க பணிகள் தொடர்ந்து வந்தது. தற்போது 20 அலகுகள் வரையிலான பணிகள் முடிந்துள்ளது. இதற்கிடையே 2,700 ஏக்கர் தரிசு நிலம் எனவும் மீதமுள்ள 326 ஏக்கர் பட்டா நிலம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படி பணி ஒருபுறம் நடந்தாலும் கூட விவசாயிகளின் போராட்டம் என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. அதாவது சிப்காட் பணியை கைவிடக்கோரி கடந்த ஜூலை மாதம் தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 126 நாட்களாக நடைபெற்றது. போராட்டக்கார்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் போராட்டடத்தை முன்னெடுத்து வந்த விவசாயிகள் 20 பேரை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர்.

இதில் அருள் ஆறுமுகம், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்கியராஜ், சோழன், விஜயன் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதனால் அவர்கள் 7 பேரையும் ஓராண்டு ஜாமீனில் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு அதிமுக, பாமக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாளை திருவண்ணாமலையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது ஏன்? என்பது பற்றி காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குண்டர் சட்டத்தில் கைதான 7 பேரும் எட்டு வழிச்சாலை போராட்டத்தை முன்னின்றி நடத்தியவர்கள். அதோடு அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் கடந்த 8 மாதங்களுக்கு செய்யாறியல் தங்கி மக்களை தூண்டிவிட்டார். கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இன்று திருவண்ணாமலையில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+