திருத்துறைப்பூண்டி அருகே கொடூரம்.. கேரள ஆம்னி வேனும், அரசு பேருந்தும் மோதிய விபத்தில் 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கேரள மாநிலத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலாவுக்கு வந்த வேனும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பாண்டி என்ற பகுதியில் வேளாங்கண்ணிக்குச் சுற்றுலா செல்லும் கேரள ஆம்னி வேன் ஒன்று வந்துள்ளது. எதிர்ப்புறமாக அரசுப் பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஆம்னி வேனும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி அதிபயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கேரள சுற்றுலா வேன் அப்பளம் போல நொறுங்கியது.

Thiruthuraipoondi road accident

இந்த விபத்தில் கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆம்னி வேனில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் ஆம்னி வேன் ஓட்டுநருடன் காரில் பயணம் செய்த ராஜேஷ் (30), ராகுல் (29), சுஜித்( 25) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாபு (25 ), சுனில் (35), ரஜினி (40 ) ஆகிய 3 பேரும் பலத்த காயங்களுடன் திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கரன் கரட் மற்றும் நாகை மண்டல அரசுப் போக்குவரத்து கழக பொது மேலாளர் ராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+