“என் பேர் பைசல் இல்ல.. சஞ்சய்”.. அண்ணாமலையை புகழ்ந்து பேசிய இளைஞர் மறுப்பு! மாட்டிக்கினாரு ஒருத்தரு
திருவாரூர்: அண்ணாமலையை இஸ்லாமிய இளைஞர் ஆதரித்து பேசுவதாக வீடியோ வெளியான நிலையில், தான் முஸ்லிமே இல்லை என்று அந்த இளைஞர் தற்போது மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
"இஸ்லாமிய முதல் தலைமுறை வாக்காளர் எடுத்த சபதம்" என்ற பெயரில் காணொலி ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில், தன்னை ஃபைசல் என்று அறிமுகம் செய்துகொள்ளும் தொப்பி அணிந்த இளைஞர் ஒருவர் அண்ணாமலை தான் அடுத்த முதலமைச்சராக வரவேண்டும் என்று பேசி அவரை புகழ்ந்து தள்ளி இருந்தார். அவருக்கு பின்னால் மற்றொரு இளைஞரும் தொப்பி அணிந்து இருந்தார். இந்த நிலையில்தான் அந்த வீடியோவில் பேசிய இளைஞர் இஸ்லாமியரே இல்லை என்பது தெரியவந்தது.

அவர் பெயர் பைசல் இல்லை என்றும், திருவாரூர் மாவட்டம் சவளக்காரன் என்ற பகுதியை சேர்ந்த முரளி என்பவரின் மகன் சஞ்சய் என்பதும் தெரிய வந்தது. அவருக்கு பின்னால் குல்லா அணிந்திருந்த இளைஞரின் பெயர் சுமன் என்று கூறப்படுகிறது. சஞ்சய் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தொழுவூரில் அமைந்து இருக்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இவர் படித்து வந்து உள்ளார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞரே தான் பைசல் இல்லை என்று பேசி வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது, "என் பெயர் பைசல் இல்லை. என் பெயர் சஞ்சய்.
என்னயா இது பித்தலாட்டம் 😂😂
— Raj ✨ (@thisisRaj_) December 11, 2023
ஃபைசல் என்கின்ற சஞ்சய். 😂
WAIT FOR IT😆 pic.twitter.com/zRXWFSYHxP
எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளார்கள். அவர்கள் என்னை பைசல் என்று அழைப்பார்கள். மன்னார்குடியில் அண்ணாமலை யாத்திரை நடைபெற்றுக்கொண்டு இருந்தது. நான் ஒரு யூடியூப் சேனல் வைத்து உள்ளேன். அப்போது கண்டெண்ட் கிடைக்கும் என்று நண்பர்கள் அழைத்தார்கள். நானும் சென்றேன். அப்போது நண்பர்களின் குல்லாவை எடுத்து போட்டோ எடுத்தேன். அங்கு பேட்டி எடுத்துக்கொண்டு இருந்தார்கள்.
இந்து இளைஞனை இஸ்லாமியர் போல் வேடமணிய செய்துபொய்ப் பிரச்சாரம் செய்த பாஜகவினர்!
— ஜெயராமன் திமுக (@jayaraman418) December 11, 2023
எனது முதல் வாக்கு அண்ணாமலைக்குதான் என்று இஸ்லாமியர்களின் பெயரில் (பைசல்) பேசிய இளைஞரின் பெயர் 'சஞ்சய் முருகன்', அவருக்கு பின்னால் நிற்பவரின் பெயர் 'சுமன்'
இவர்கள் இருவரும் லெட்சுமாங்குடி பகுதியை… pic.twitter.com/uufYignmJc
அங்கு நானே விருப்பப்பட்டுதான் பேசினேன். அப்போது என் பெயர் சஞ்சய் என்று சொன்னவுடன் உன் பெயர் பைசல் என்று நண்பர்கள் சொன்னார்கள். நானும் அப்படியே சொல்லி பேசினேன். இது மத பிரச்சனையாகிறது என்று சொன்னார்கள். புண்படுத்துவதைபோல் தெரியாமல் செய்துவிட்டேன். இனி அதுபோன்று செய்ய மாட்டேன். நான் கல்லூரிதான் படித்து வருகிறேன். அந்த வீடியோவை பார்த்து யாரும் தவறாக நினைக்க வேண்டாம். எனக்கு எம்மதமும் சம்மதம்தான்." என்றார்.
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது












Click it and Unblock the Notifications