காரை துறந்தார்.. கையில் கயிறு பிடித்தார்.. மாட்டு வண்டி ஓட்டி வந்த எடப்பாடியார்.. வியந்துபோன மக்கள்
திருவாரூர்: காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து முதல்வர் எடப்பாடியாருக்கு திருவாரூரில் இன்று இரவு பாராட்டு விழாவுக்கு, விவசாய சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்தன. அதில் காவிரி காப்பாளர் என்ற பட்டப்பெயர் எடப்பாடியாருக்கு வழங்கப்பட்டது.
முன்னதாக, காரில் வராமல் மாட்டு வண்டியை தானே ஓட்டிக் கொண்டு திருவாரூர் விவசாயிகள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டார். தானும் விவசாயிதான் என அடிக்கடி மேடைகளில் கூறுபவர் எடப்பாடியார். எனவே, மாட்டு வண்டியை ஓட்டி வந்து அதை நிரூபித்துக் காட்டினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

முதல்வர் டுவிட்டர் பதிவில், இதுபற்றி கூறுகையில், காவிரி டெல்டா பகுதியை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவித்து வரலாற்று சாதனை படைத்தமைக்காக, திருவாரூரில் விவசாய சங்கங்களின் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழாவிற்கு மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மாட்டு வண்டியில் வந்து உற்சாகத்துடன் கலந்து கொண்டார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, வேட்டியை மடித்துக் கட்டி, நாற்று நட்டும் எடப்பாடியார் அசத்தியிருந்தார்.
திருவாரூர் பாராட்டு விழாவில் பேசிய, எடப்பாடியார், நீண்டகாலமாக விவசாயிகள் வைத்து வரும் கோரிக்கைகளை எங்கள் அரசு நிறைவேற்றி வருகிறது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக, அனைத்து விவசாய சங்க அமைப்புகளும் சேர்ந்து காவிரி காப்பாளர் என்ற ஒரு அற்புதமான படத்தை எனக்கு கொடுத்துள்ளார்கள்.
காவிரி டெல்டா பகுதியை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவித்து வரலாற்று சாதனை படைத்தமைக்காக, திருவாரூரில் விவசாய சங்கங்களின் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழாவிற்கு மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மாட்டு வண்டியில் வந்து உற்சாகத்துடன் கலந்து கொண்டார். pic.twitter.com/FJxotJjd5d
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) March 7, 2020
காவிரியை காக்க வேண்டிய பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக உணருகிறேன். இத்தோடு முடிந்துவிடவில்லை.. இனி எப்போது பிரச்சனை வந்தாலும் காவேரியை நீங்கள்தான் காக்க வேண்டும் என்ற பொறுப்பை என் மீது சுமத்தி விட்டீர்கள். நிச்சயமாக கண்ணை இமை காப்பது போல டெல்டா பாசன விவசாயிகளை, நானும் எங்களுடைய அரசும் நிச்சயமாக காப்போம்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) March 7, 2020
அச்சப்பட தேவையில்லை. நான் ஒரு விவசாயி என்ற காரணத்தால் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய துன்பங்கள், துயரங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். படிப்படியாக விவசாயிகள் பொருளாதார ரீதியாக மேம்படுவதற்கு எனது அரசு அனைத்து விதமாகவும், துணை நிற்கும் என்று தெரிவித்தார். மேலும் பல திட்டங்களையும் அறிவித்தார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications