பெற்றோருக்கு ஜாக்பாட்! "அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்த்தால் தங்கம்.." வந்தது கலக்கல் அறிவிப்பு
திருவாரூர்: அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், அரசுப் பள்ளியில் சேர்ந்தால் தங்கம் வழங்கப்படும் என்று பள்ளி தலைமை ஆசிரியை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் மிகச் சிறந்த கல்வி முறையைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கல்வியில் நாம் மிகச் சிறந்த இடத்திலேயே இருக்கிறோம்.

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிகளில் சேர்வோரின் எண்ணிக்கையும் கூட இந்தியச் சராசரியுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாகவே உள்ளது.
தமிழ்நாடு: அதேபோல மருத்துவ கல்வியிலும் கூட நாம் தான் மிகச் சிறந்து விளங்குகிறோம்.. வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு அதிகபட்ச மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. அந்தளவுக்கு நாம் விரிவான ஒரு கல்வி முறையைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. கல்வி முறையை மேலும் மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டே வருகிறது.
அதேநேரம் இங்கே கல்வி என்பது வணிகமயமானதாக என்ற புகாரும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார்ப் பள்ளிகளே அதிகமாக இருக்கிறது. அனைவரும் கல்வி கற்கத் தனியார் பங்களிப்பும் நிச்சயம் தேவை தான் என்ற போதிலும், தனியார்ப் பள்ளிகளில் படிக்கும் கல்வியே சிறந்தது. அரசுப் பள்ளிகளின் கல்வி சிறப்பாக இருக்காது என்று சிலர் திட்டமிட்டு தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.
மாணவர் சேர்க்கை: இருப்பினும், இதையெல்லாம் தாண்டியும் அரசுப் பள்ளிகளில் கடந்தாண்டு மாணவர் சேர்க்கை அதிகமாகவே இருந்து இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாகப் பொருளாதார பாதிப்புகள் மிக மோசமாக இருந்த நிலையில், இதன் காரணமாகவே அரசுப் பள்ளிகளை நோக்கிப் பல பெற்றோர்கள் வந்தனர். வரும் ஆண்டுகளிலும் இந்த மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்கத் தேவையான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே பள்ளி தலைமை ஆசிரியரை ஒருவர் அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்த்தால் தங்க நாணயத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கே தலைமை ஆசிரியையாக இருப்பவர் இந்திரா. இவர் தான் தனது பள்ளியில் மாணவ சேர்க்கையை அதிகரிக்க இப்படியொரு திட்டத்தை அறிவித்துள்ளார்.
தங்கம்: வரும் கல்வியாண்டில் தனது பள்ளியில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று இந்திரா அறிவித்துள்ளார். அதேபோல பள்ளியில் சேரும் மாணவர்களில் ஒருவரைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்த ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மாணவ சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி, அறிமுக விழாக்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தங்க நாணயம் வழங்கப்படும் என்றும் இவர் அறிவித்துள்ளார். இதற்கு அப்பகுதியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications