Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.8 கோடி மதிப்பு திமிங்கல உமிழ்நீர் கடத்தல்... நாம் தமிழர் கட்சி நிர்வாகி உட்பட இருவர் கைது..!

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே திமிங்கலத்தின் உமிழ்நீரை கடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகி உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடல் தங்கம் என்றழைக்கப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீர், அம்பர்கிரீஸ் என்ற பெயரில் சட்டவிரோதமாக விற்கப்படுகின்றன.

திமிலங்கத்தின் உமிழ்நீருக்கு ஏன் இப்படி ஒரு மவுசு என்பதை இங்கே பார்க்கலாம்.

அம்பர்கிரீஸ்

அம்பர்கிரீஸ்

திமிங்கலத்தின் உமிழ்நீராக கருதப்படும் அம்பர்கிரீஸ் மூலம் உயர் ரக வாசனைத் திரவியங்களும், உயர் ரக மதுபானத்திற்கான வாசனையூட்டிகளும் தயாரிக்கப்படுகின்றன. அரபு நாடுகளில் ஒரு கிலோ அம்பர் கிரீஸ் ரூ.1 கோடி வரை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளப்படுகின்றன. குறிப்பாக வாசனைத் திரவிய தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமிருக்கும் துபாயில் இதற்கு பெரியளவில் வரவேற்பு உள்ளது.

குறுக்கு வழி

குறுக்கு வழி

இதனால் குறுக்கு வழிகளில் முன்னேற வேண்டும் என துடிப்பவர்களது முதல் சாய்ஸ் திமிங்கல உமிழ்நீர் விற்பனையாகத் தான் இருக்கும். திமிங்கலத்தால் கடலில் கக்கப்படும் உமிழ்நீரானது, கடல் நீராலும், சூரிய ஒளியாலும், பல்வேறு நிறங்களுக்கு மாறி படிமங்களாகின்றன. இவைகள் சில நேரங்களில் மீனவர்கள் வலைகளில் சிக்குவதும் உண்டு, சில நேரங்களில் கடல் அலையால் கரை ஒதுக்கப்படுவதும் உண்டு.

இந்தியாவில் தடை

இந்தியாவில் தடை

இந்தியாவை பொறுத்தவரை வனவிலங்கு பாதுகாப்புச் சட்டவிதிப்படி திமிங்கல உமிழ்நீரை விற்பனை செய்வதும், பொதுமக்கள் பயன்படுத்துவதும் தவறாகும். இருப்பினும் பல இடங்களில் அம்பர்கிரீஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீர் கடத்தல் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. பொதுவாக இது போன்ற சட்ட விரோத காரியங்களில் ஈடுபடும் யாரும், தனி நபராக செயல்பட மாட்டார்கள். நான்கைந்து பேர் கொண்ட கும்பலாக தான் இதில் ஈடுபடுவார்கள்.

ரூ.8 கோடி

ரூ.8 கோடி

அதில் விற்பனை செய்யும் போது ஏற்படும் கருத்து வேறுபாடும், பணத்தை பங்கிட்டுக் கொள்வதில் ஏற்படும் பிரச்சனையும் காவல்துறையிடம் போட்டுக்கொடுப்பது வரை செல்லும். அப்படித்தான் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் திமிங்கலத்தின் உமிழ்நீரை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட அம்பர் கிரீஸின் மதிப்பு ரூ. 8 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத முறையில் அவர்கள் துபாய்க்கு கொண்டு செல்ல இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விசாரணை

விசாரணை

இதனிடையே கைது செய்யப்பட்ட முத்துப்பேட்டை நகர நாம் தமிழர் கட்சி நிர்வாகி நிஜாமுதீன் மற்றும் ஜாகிர் உசேன் ஆகிய இருவரிடமும் திமிங்கல் உமிழ்நீர் எப்படி கிடைத்தது, இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+