ரூ.8 கோடி மதிப்பு திமிங்கல உமிழ்நீர் கடத்தல்... நாம் தமிழர் கட்சி நிர்வாகி உட்பட இருவர் கைது..!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே திமிங்கலத்தின் உமிழ்நீரை கடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகி உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடல் தங்கம் என்றழைக்கப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீர், அம்பர்கிரீஸ் என்ற பெயரில் சட்டவிரோதமாக விற்கப்படுகின்றன.
திமிலங்கத்தின் உமிழ்நீருக்கு ஏன் இப்படி ஒரு மவுசு என்பதை இங்கே பார்க்கலாம்.

அம்பர்கிரீஸ்
திமிங்கலத்தின் உமிழ்நீராக கருதப்படும் அம்பர்கிரீஸ் மூலம் உயர் ரக வாசனைத் திரவியங்களும், உயர் ரக மதுபானத்திற்கான வாசனையூட்டிகளும் தயாரிக்கப்படுகின்றன. அரபு நாடுகளில் ஒரு கிலோ அம்பர் கிரீஸ் ரூ.1 கோடி வரை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளப்படுகின்றன. குறிப்பாக வாசனைத் திரவிய தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமிருக்கும் துபாயில் இதற்கு பெரியளவில் வரவேற்பு உள்ளது.

குறுக்கு வழி
இதனால் குறுக்கு வழிகளில் முன்னேற வேண்டும் என துடிப்பவர்களது முதல் சாய்ஸ் திமிங்கல உமிழ்நீர் விற்பனையாகத் தான் இருக்கும். திமிங்கலத்தால் கடலில் கக்கப்படும் உமிழ்நீரானது, கடல் நீராலும், சூரிய ஒளியாலும், பல்வேறு நிறங்களுக்கு மாறி படிமங்களாகின்றன. இவைகள் சில நேரங்களில் மீனவர்கள் வலைகளில் சிக்குவதும் உண்டு, சில நேரங்களில் கடல் அலையால் கரை ஒதுக்கப்படுவதும் உண்டு.

இந்தியாவில் தடை
இந்தியாவை பொறுத்தவரை வனவிலங்கு பாதுகாப்புச் சட்டவிதிப்படி திமிங்கல உமிழ்நீரை விற்பனை செய்வதும், பொதுமக்கள் பயன்படுத்துவதும் தவறாகும். இருப்பினும் பல இடங்களில் அம்பர்கிரீஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீர் கடத்தல் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. பொதுவாக இது போன்ற சட்ட விரோத காரியங்களில் ஈடுபடும் யாரும், தனி நபராக செயல்பட மாட்டார்கள். நான்கைந்து பேர் கொண்ட கும்பலாக தான் இதில் ஈடுபடுவார்கள்.

ரூ.8 கோடி
அதில் விற்பனை செய்யும் போது ஏற்படும் கருத்து வேறுபாடும், பணத்தை பங்கிட்டுக் கொள்வதில் ஏற்படும் பிரச்சனையும் காவல்துறையிடம் போட்டுக்கொடுப்பது வரை செல்லும். அப்படித்தான் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் திமிங்கலத்தின் உமிழ்நீரை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட அம்பர் கிரீஸின் மதிப்பு ரூ. 8 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத முறையில் அவர்கள் துபாய்க்கு கொண்டு செல்ல இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விசாரணை
இதனிடையே கைது செய்யப்பட்ட முத்துப்பேட்டை நகர நாம் தமிழர் கட்சி நிர்வாகி நிஜாமுதீன் மற்றும் ஜாகிர் உசேன் ஆகிய இருவரிடமும் திமிங்கல் உமிழ்நீர் எப்படி கிடைத்தது, இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications