"உன் மகன் எனக்கு பிறக்கல".. டெய்லி இதே சண்டை.. குடிகார கணவர்.. அம்மிக் கல்லை தலையில் போட்ட மனைவி!

கணவனை கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: குடிச்சிட்டு வீட்டுக்கு வர்றதும் இல்லாம, தினமும் சந்தேகம் வேற.. "உன் மகன் எனக்கு பிறக்கல" என்று சொல்லவும்தான், கணவனை அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொன்றார் கவுரி. இவருக்கு நீதிமன்றம் இப்போது ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

திருவள்ளூரை அடுத்துள்ள பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவர் ஒரு கூலி தொழிலாளி. கவுரி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர். கவுரிக்கு 25 வயது!

Life imprisonment to Wife in Husband murder case near Thiruvallur

ராஜுக்கு குடிப்பழக்கம் இருந்தது.. மனைவி மீது சந்தேகமும் இருந்தது. இதனால் தினமும் ராத்திரியில் சண்டையும், தகராறும் நடந்து வந்தது. "ஆகாஷ் எனக்கு பிறக்கவில்லை, அவனை கொன்னுட போறேன்.. பார்த்துட்டே இரு" என்று அடிக்கடி சொல்லியும், கவுரியையும் சரமாரியாக தாக்கியும் வந்திருக்கிறார்.

இதில் அளவுக்கு அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார் கவுரி. இப்படித்தான் சம்பவத்தன்றும், இதேபோல சண்டை நடக்கவும், கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்றுவிட்டார். பிணத்தை வீட்டுக்குள்ளேயே வைத்துவிட்டு கதவையும் பூட்டி கொண்டு, குழந்தையுடன் மாயமானார்.

2 நாள் கழித்து வீட்டில் இருந்து நாற்றம் வரவும்தான் அக்கம்பக்கத்தினர் பட்டாபிராம் போலீசுக்கு தகவல் வந்து விசாரணை ஆரம்பமானது. பிறகு தலைமறைவாக இருந்த கவுரியையும் கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2016-ம் வருஷம் நடந்தது.

இது சம்பந்தமான விசாரணையும், திருவள்ளூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில், விசாரணை முடிந்த நிலையில், கவுரிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 4 மாதம் சிறை தண்டனை என்றும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, போலீசார் கவுரியை புழல் ஜெயிலில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+