திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்துக்கு நாளை (நவம்பர் 13) உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ. முத்துப்பேட்டை தர்கா பெரிய கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலத்தையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 13ஆம் தேதியான நாளை திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான்னோடை தர்கா பெரிய கந்தூரி விழா இன்று நள்ளிரவு நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பல ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்பதால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மாற்று வேலை நாளாக டிசம்பர் 7ஆம் தேதி கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார். அத்தியாவசிய பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications