நாகூர் தர்காவில் அமைச்சர் ஆவடி நாசர்! வெள்ளிக்கிழமை தொழுகையும் மனம் உருகி பிரார்த்தனையும்!
நாகை: இஸ்லாமியர்களின் புனித தலமாக கருதப்படும் நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவுக்கு சென்ற அமைச்சர் ஆவடி நாசர், அங்கு சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்டார்.
திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆய்வுக்கு சென்ற அவர், வெள்ளிக்கிழமையான நேற்று நாகூரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் மதிய தொழுகையில் பங்கேற்று விட்டு அதை தொடர்ந்து அங்கு சிறப்பு து ஆவும் செய்தார்.
அமைச்சராக இருக்கிற போதும் ஆவடி நாசரிடம் அதற்குரிய எந்த படோடாபமும் இல்லாததை கண்ட உள்ளூர்வாசிகள் அதை தங்களுக்குள் பேசு பொருளாக வைத்துக்கொண்டனர்.

அமைச்சர் நாசர்
பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரை பொறுத்தவரை மதப் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரிடமும் அன்பாக பழகக் கூடியவர். அதேவேளையில் கட்சிப் பணிகள் என வந்துவிட்டால், அதனை முறையாக செய்யாதவர்கள் மீது கடுமை காட்டவும் தவறாதவர். மனதில் தோன்றும் கருத்தை ஒளிவு மறைவின்றி பேசக்கூடிய இவர், தனது துறைரீதியான வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

சிறப்பு பிரார்த்தனை
அந்த வகையில் மாவட்ட வாரியாக ஆய்வுப்பணிகளை செய்து வரும் அவர், டெல்டா பகுதிக்கும் நேற்று ஒரு விசிட் அடித்திருக்கிறார். வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று மதியம் தொழுகையில் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்ட அமைச்சர் நாசர், நேற்று புகழ்பெற்ற நாகூர் தர்காவில் உள்ள பெரிய பள்ளிவாசலுக்கு சென்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள சாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் அடக்கஸ்தலத்தில் மனம் உருகி பிரார்த்தனை செய்தார்.

சிறப்பு வரவேற்பு
அப்போது தன்னுடன் வந்த பி.எஸ்.ஓ., காவலர்கள் என அனைவரையும் உடன் அழைத்துச்செல்லாமல் மிகவும் எளியமையாக தாம் மட்டுமே தர்காவுக்குள் சென்றார். அமைச்சரை கண்ட உள்ளூர்வாசிகள் பலரும் தங்களை தாங்களாகவே அறிமுகம் செய்துகொண்டு கைகொடுக்க ஆர்வம் காட்டினர். இதனிடையே அமைச்சருக்கு நாகூர் தர்கா கலீஃபா (பரம்பரை டிரஸ்ட்) சிறப்பு வரவேற்பு கொடுக்க முனைந்த போது, அதனை வேண்டாம் என தவிர்த்துவிட்டார் ஆவடி நாசர்.

தர்கா வரலாறு
அமைச்சர் ஆவடி நாசரிடம் நாகூர் தர்காவின் வரலாற்றை அதன் கலீஃபா விவரமாக எடுத்துக்கூறினார். இதனிடையே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், முன்னாள் எம்.பி.ஹாரூன் ரஷீத், உள்ளிட்ட இன்னும் பல இஸ்லாமிய பிரமுகர்கள் நாகூர் தர்காவுக்கு வழக்கமாக சென்று வருவது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications