இடைத் தேர்தல் ரத்து எதிரொலி.. திருவாரூர் மக்களுக்கும் ரூ. 1000 பொங்கல் பரிசு!
திருவாரூர்: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தானதால் பொங்கல் பரிசு தொகை ரூ 1000 கிடைக்கும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
திருவாரூர் தொகுதி கருணாநிதியின் தொகுதியாகும். இங்கு இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் எம்எல்ஏவாக இருந்தார். இந்நிலையில் அவர் வயது மூப்பு காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மரணமடைந்தார்.

வேட்பாளர்கள்
இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு தேர்தல் வரும் 28-ஆம் தேதி என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் திமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகிய கட்சிகள் தங்கள் தரப்பில் வேட்பாளர்களை நிறுத்தின.

கோரிக்கை
இந்த நிலையில் கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகள் இன்னும் முடியாததால் இந்த இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

பரிசு பொருட்கள்
இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனிடையே தமிழகத்தில் ரூ. 1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு பொருட்களை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

பொங்கல் பரிசு
தேர்தல் நடத்தை அமலில் இருந்ததால் திருவாரூர் அந்த திட்டம் வழங்கப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தேர்தலே ரத்து செய்யப்பட்டுவிட்டதால் திருவாரூர் தொகுதிக்கு ரூ 1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகை வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications