Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் மாற்றுத்திறனாளிகளுக்காக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜூன் மாதம் முதல் வியாழக்கிழமை 5-ந் தேதி காலை 11 மணிக்கு திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "திருவாரூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜூன் மாதம் முதல் வியாழக்கிழமை 5-ந் தேதி காலை 11 மணிக்கு திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

Tiruvarur Collector Mohanachandran Announces Key Benefits and Support for the Differently Abled

அதேபோல் இரண்டாம் வியாழக்கிழமை 12-ந்தேதி காலை 11 மணிக்கு மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இந்த சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி கோட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற இதுவரை விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் தங்களது இருப்பிட முகவரிக்கான ஆதாரம், குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் கூட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா இருப்பின் தொகுப்பு வீடு கோருபவர்கள், நூறு நாள் அட்டை கோருபவர்கள் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களும் அளிக்கலாம். இதற்கு முன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின், அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சிறப்பு குறை தீர்க்கும் நாளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+