Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மன்னார்குடி சேர்மன் பதவி! எதிரும் புதிருமாக மன்னை நாராயணசாமி வழித்தோன்றல்கள்! யார் கை ஓங்கும்?

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: மன்னார்குடி நகராட்சி சேர்மன் பதவிக்கான போட்டியில், திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்த மறைந்த மன்னை நாராயணசாமி வாரிசுகள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறதாம்.

இதனால் யாரை வேட்பாளராக களமிறக்குவது என்பதில் மாவட்டச் செயலாளர் தரப்புக்கும், கட்சித் தலைமைக்கும் சற்று குழப்பம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

டெல்டா மாவட்டங்களில் மன்னார்குடி முக்கியமான நகராட்சியாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை பெரியார்

தஞ்சை பெரியார்

தஞ்சை பெரியார் என பெருமையுடன் அழைக்கப்பட்ட மன்னை நாராயணசாமி திமுக ஆட்சிக்காலத்தில் முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்தவர். அண்ணா, கருணாநிதி என அனைவருடனும் சரிக்கு சரியாக அமர்ந்து வாதிட்டவர். தன்வாழ்நாளின் இறுதி வரை சுயமரியாதை சுடராக திகழ்ந்த இவரை சிறப்பிக்கும் பொருட்டு, மன்னார்குடியில் அரசுப் பள்ளி உட்பட பல்வேறு ஸ்தாபனங்களுக்கு மன்னை நாராயணசாமியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மன்னார்குடி சேர்மன்

மன்னார்குடி சேர்மன்

இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த தஞ்சை பெரியாரின் பேரன் தான் சோழராஜன். திமுக மாணவரணி மாநில துணைச் செயலாளராக உள்ள இவர், மன்னார்குடி நகராட்சி சேர்மன் பதவிக்கான ரேஸில் இருக்கிறார். இதற்காக டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. மூலம் காய் நகர்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேபோல் மன்னை நாராயணசாமியின் தம்பி மகளான மீனாட்சி சூர்யபிரகாசும் மன்னார்குடி சேர்மன் பதவியில் அமர காய் நகர்த்தி வருகிறார்.

கவுன்சிலர் சீட்

கவுன்சிலர் சீட்

இவருக்கு மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் தரப்பு ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட இவர் சீட் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரை தவிர்த்து இன்னும் பல முக்கியப் பிரமுகர்களும் மன்னார்குடி சேர்மன் ஆக வேண்டும் என்ற கனவில் கவுன்சிலர் சீட்டுக்கு விருப்பமனு கொடுத்துவிட்டு காத்திருக்கின்றனர்.

பொறுப்பு அமைச்சர்

பொறுப்பு அமைச்சர்

இதனிடையே இந்த விவகாரத்தில் திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரான சக்கரபாணி பெரிதாக தலையிடுவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மாவட்டச் செயலாளராக உள்ள பூண்டி கலைவாணனுக்கு யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி எளிது என்பது தெரியும் என்பதால் அவரது முடிவில் தலையிடுவது சரியாக இருக்காது என அவர் கருதுவதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+