விண்வெளியில் இஸ்ரோ படைக்கும் புதிய சாதனை.. இன்று ஸ்பேடெக்ஸ் விண்கலன்களை ஒருங்கிணைக்க திட்டம்!
ஸ்ரீஹரிகோட்டா: விண்வெளியில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளைத் தொடர்ச்சியாகப் படைத்து வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் இரு விண்கலன்களை விண்வெளியில் ஒருங்கிணைக்கும் பரிசோதனையை இஸ்ரோ மேற்கொள்கிறது. முதல் முயற்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிலையில், சில காரணங்களால் அது தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே விண்கலன்களை ஒருங்கிணைப்பு பணி இன்று (ஜனவரி 10) நடக்கவுள்ளது.
சர்வதேச அளவில் இப்போது முன்னணி விண்வெளி நிறுவனங்களில் ஒன்றாக இஸ்ரோ இருக்கிறது. இஸ்ரோ சார்பில் விண்வெளியில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக உலகின் பல வளர்ந்த நாடுகள் கூட தங்கள் விண்கலனைகளை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோவிடமே வருகிறது. இஸ்ரோவும் கூட ஆண்டுக்குப் பல நூறு விண்கலன்களை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி வருகிறது
இஸ்ரோ அமைக்கும் ஆய்வகம்:
அடுத்த கட்டமாக இஸ்ரோ நிறுவனம் விண்வெளியில் ஒரு ஆய்வு நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. அதாவது ஸ்பேஸில் எப்படி சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் இருக்கிறதோ அதேபோல பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் என்ற பெயரில் விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. வரும் 2035ம் ஆண்டுக்குள் இந்த விண்வெளி ஆய்வகத்தை நிறுவ இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
அதற்கான சோதனை மற்றும் முன்னேற்பாடுகள் இஸ்ரோ இப்போது மேற்கொண்டு வருகிறது. முன்னோட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) என்ற திட்டத்தை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அதாவது இரு விண்கலன்களை விண்வெளியில் வைத்து ஒருங்கிணைக்கும் பரிசோதனை முயற்சியே இதுவாகும்.
இரு விண்கலன்கள்:
இதற்காகவே ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய இரு விண்கலன்கள் வடிவமைக்கப்பட்டு இருந்த நிலையில், அவை கடந்த டிசம்பர் மாதம் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன. இப்போது இந்த இரு விண்கலன்களும் ஒரே சுற்றுவட்டபாதையில் குறிப்பிட்ட தொலைவில் ஒன்றன்பின் ஒன்றாகச் சுற்றி வந்து கொண்டு இருக்கிறது.
இதன் தூரத்தை 225 மீட்டராக குறைக்க முதலில் நேற்று முன்தினம் புதன்கிழமை இஸ்ரோ முயன்றது. இருப்பினும், புறச்சூழல்கள் காரணமாக விண்கலன்களின் இயக்க வேகம் எதிர்பார்த்ததை காட்டிலும் குறைந்துவிட்டது.. இதையடுத்து விண்கலன்களை ஒருங்கிணைக்கும் நிகழ்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும் அதேநேரம் விண்கலன்கள் இப்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டது.
இஸ்ரோ அறிவிப்பு:
இந்தச் சூழலில் தான் ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களின் ஒருங்கிணைப்பு செயல்பாடுகள் இன்று (ஜனவரி10) மீண்டும் நடக்க உள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில், "இரு விண்கலன்களையும் நெருக்கமாகக் கொண்டு செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை இந்த ஒருங்கிணைப்பு பணிகளின் ஆரம்ப நிலையை எட்டக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இரு விண்கலன்களின் ஒருங்கிணைப்பு பணிகள் இன்று முடியும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. ஒருங்கிணைப்பு பணிகள் வெற்றிகரமாக முடிந்தால் அது இஸ்ரோ அமைப்பின் மிகப் பெரிய சாதனையாக இருக்கும் என்பதால் இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது வெற்றிகரமாக முடிந்தால் தான் விண்வெளி ஆய்வகத்திற்கான அடுத்தகட்ட பணிகளை இஸ்ரோ தொடங்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications