Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விண்வெளியில் இஸ்ரோ படைக்கும் புதிய சாதனை.. இன்று ஸ்பேடெக்ஸ் விண்கலன்களை ஒருங்கிணைக்க திட்டம்!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீஹரிகோட்டா: விண்வெளியில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளைத் தொடர்ச்சியாகப் படைத்து வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் இரு விண்கலன்களை விண்வெளியில் ஒருங்கிணைக்கும் பரிசோதனையை இஸ்ரோ மேற்கொள்கிறது. முதல் முயற்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிலையில், சில காரணங்களால் அது தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே விண்​கலன்​களை ஒருங்கிணைப்பு பணி இன்று (ஜனவரி 10) நடக்கவுள்ளது.

சர்வதேச அளவில் இப்போது முன்னணி விண்வெளி நிறுவனங்களில் ஒன்றாக இஸ்ரோ இருக்கிறது. இஸ்ரோ சார்பில் விண்வெளியில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

isro space science

இதற்காக உலகின் பல வளர்ந்த நாடுகள் கூட தங்கள் விண்கலனைகளை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோவிடமே வருகிறது. இஸ்ரோவும் கூட ஆண்டுக்குப் பல நூறு விண்கலன்களை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி வருகிறது

இஸ்ரோ அமைக்கும் ஆய்வகம்:

அடுத்த கட்டமாக இஸ்ரோ நிறுவனம் விண்வெளியில் ஒரு ஆய்வு நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. அதாவது ஸ்பேஸில் எப்படி சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் இருக்கிறதோ அதேபோல பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் என்ற பெயரில் விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. வரும் 2035ம் ஆண்டுக்குள் இந்த விண்வெளி ஆய்வகத்தை நிறுவ இஸ்ரோ முடிவு செய்துள்ளது.


அதற்கான சோதனை மற்றும் முன்னேற்​பாடுகள் இஸ்ரோ இப்போது மேற்கொண்டு வருகிறது. முன்னோட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) என்ற திட்டத்தை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அதாவது இரு விண்​கலன்களை விண்வெளியில் வைத்து ஒருங்​கிணைக்​கும் பரிசோதனை முயற்சியே இதுவாகும்.

இரு விண்கலன்கள்:

இதற்காகவே ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய இரு விண்கலன்கள் வடிவமைக்கப்பட்டு இருந்த நிலையில், அவை கடந்த டிசம்பர் மாதம் பிஎஸ்​எல்வி சி-60 ராக்​கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன. இப்போது இந்த இரு விண்கலன்களும் ஒரே சுற்றுவட்டபாதையில் குறிப்பிட்ட தொலைவில் ஒன்றன்பின் ஒன்றாகச் சுற்றி வந்து கொண்டு இருக்கிறது.

இதன் தூரத்தை 225 மீட்​டராக குறைக்க முதலில் நேற்று முன்​தினம் புதன்கிழமை இஸ்ரோ முயன்றது. இருப்பினும், புறச்​சூழல்கள் காரணமாக விண்கலன்களின் இயக்க வேகம் எதிர்பார்த்ததை காட்டிலும் குறைந்துவிட்டது.. இதையடுத்து விண்​கலன்களை ஒருங்​கிணைக்கும் நிகழ்வு தற்காலிகமாக ஒத்தி வைக்​கப்​படுவதாகவும் அதேநேரம் விண்கலன்கள் இப்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டது.

இஸ்ரோ அறிவிப்பு:

இந்தச் சூழலில் தான் ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்​கலன்​களின் ஒருங்​கிணைப்பு செயல்​பாடுகள் இன்று (ஜனவரி10) மீண்டும் நடக்க உள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில், "இரு விண்கலன்களையும் நெருக்கமாகக் கொண்டு செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை இந்த ஒருங்கிணைப்பு பணிகளின் ஆரம்ப நிலையை எட்டக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இரு விண்கலன்களின் ஒருங்கிணைப்பு பணிகள் இன்று முடியும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. ஒருங்கிணைப்பு பணிகள் வெற்றிகரமாக முடிந்தால் அது இஸ்ரோ அமைப்பின் மிகப் பெரிய சாதனையாக இருக்கும் என்பதால் இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது வெற்றிகரமாக முடிந்தால் தான் விண்வெளி ஆய்வகத்திற்கான அடுத்தகட்ட பணிகளை இஸ்ரோ தொடங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+