குழந்தைகளுடன் பல மைல் தூரம் பைக்கில் பயணம்.. திருப்பூரில் ஒரே குடும்பத்தினர் 3 பேர் சாவு
திருப்பூர்: 400 கிலோமீட்டருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் குழந்தைகள் மற்றும் மனைவியை அழைத்துச் சென்றவர், திருப்பூர் அருகே விபத்தில் சிக்கினார். இதில் அந்த குடும்பத்தினர் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கன்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் தனது மனைவி தமிழ் செல்வி(26) மகன் ஈஸ்வரன் (6) மகள் நித்திகா (3) ஆகியோருடன் தனது இருசக்கர வாகனத்தில், சொந்த ஊரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்கு திருமண விழாவிற்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து தனது வானத்தில் சூலூர் திரும்பும் போது அவிநாசி பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் அவரது மகன் ஈஸ்வரன் சம்பவ இடத்தில் பலியானார். பலத்த காயங்களுடன் அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ரமேஷ்ம் உயிரிழந்தார். மேலும் இன்று காலை சிகிச்சை பலனின்றி தமிழ்ச் செல்வியும் உயிரிழந்தார். அதிர்ஷ்ட வசமாக 3 வயது குழந்தை நித்திகா உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் குழந்தைகள் மற்றும் மனைவியை பலநூறு கிலோமீட்டர் அழைத்துச் சென்ற தந்தையின் செயலால் ஒரு குடும்பமே உயிரிழந்ததுள்ளது. 3வயது குழந்தை, தாய், தந்தையை இழந்து பரிதவித்து வருகிறது.












Click it and Unblock the Notifications