Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி பெயரைச் சொல்லி திருப்பூரில் பாஜகவினர் கட்டாய வசூல்? ஜவுளிக்கடை நடத்தும் பெண் குமுறல்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: பிரதமர் மோடி பெயரைச் சொல்லி திருப்பூரில் பாஜகவினர் கட்டாய நன்கொடை வசூலில் ஈடுபடுவதாக ஜவுளிக்கடை நடத்தும் பெண் ஒருவர் பகிரங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

50 ரூபாய், 20 ரூபாய் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மறுக்கும் அவர்கள் 500 ருபாய் கேட்டு அடம் பிடித்ததாகவும் தனது பக்கத்து கடைக்காரர் வேறு வழியின்றி 200 ரூபாய் கொடுத்து அனுப்பி வைத்ததாகவும் அந்தப் பெண் குற்றஞ்சாட்டியுள்ளார். கேட்டால் தலைவர் வருகிறார் என்பதால் நன்கொடை வசூலிப்பதாக அவர் கூறினார்கள் என்றார். இது தொடர்பான வீடியோவை தினசரி நாளிதழ் ஒன்றின் சமூக வலைதளப் பக்கங்களில் காண முடிகிறது.

BJP forced collection in Tirupur by mentioning Modis name?

வரும் 27ஆம் தேதி அன்று திருப்பூர் வருகை தரும் பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதனால் இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக பாஜக கவனித்து வருகிறது. அதே போல் பாதுகாப்பு பணிகளையும் மேற்கு மண்டல ஐஜி தலைமையில் காவல்துறையினர் கவனித்து வருகின்றனர்.

பிப்ரவரி 27ஆம் தேதி மதியம் 1.20 க்கு கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, பிற்பகல் 2 மணிக்கு கோவை சூலூர் சென்றடைகிறார். அங்கிருந்து பிற்பகல் 2.10 க்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடம் செல்கிறார்.

பிற்பகல் 2.45 முதல் 3.45 வரை, அதாவது 1 மணி நேரம் என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்று பேசும் மோடி, அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பல்லடத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 5 மணிக்கு மதுரை சென்றடைகிறார். அங்கு மாலை 5.15 முதல் 6.15 மணி வரை தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, மாலை 6.45 மணியளவில் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக கூட்டணிக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்துப் பேசுகிறார்.

மறுநாள் காலை, அதாவது 28ஆம் தேதி அன்று காலை 8.15 மணிக்கு நட்சத்திர விடுதியில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, 8.40 க்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு 9 மணிக்கு தூத்துக்குடி சென்றடைகிறார். அங்கு முக்கால் மணி நேரம் மட்டும் இருக்கும் பிரதமர் மோடி, 9.45 முதல் 10.30 மணி வரை அரசு விழாவில் பங்கேற்றுவிட்டு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 11.10க்கு நெல்லை செல்கிறார்.

இதனிடையே விஷயத்திற்கு வருவோம், பிரதமர் மோடி வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக பாஜக பக்காவாக செய்து வருகிறது. சிறு வியாபாரிகளிடம் டொனேஷன் வாங்கித் தான் செலவுகளை கவனிக்க வேண்டும் என்ற நிலையில் பாஜக இல்லை. ஒரே ஒரு போன் காலில் எத்தனையோ கார்ப்பரேட் கம்பெனிகள் நன்கொடை வழங்க முன்வரக் கூடும், இந்தச் சூழலில் பிரதமர் மோடியின் பெயரைச் சொல்லி சிறு வணிகர்கள், வியாபாரிகளிடம் தங்களை பாஜகவினர் எனக் கூறிக்கொண்டு சிலர் திருப்பூரில் கட்டாய நன்கொடை வசூலில் ஈடுபட்டிருப்பது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இதனை தமிழக பாஜக தலைமை நிர்வாகிகள் கவனித்தில் கொண்டு, கட்சிப் பெயரை தவறாக பயன்படுத்தி வசூல் வேட்டையில் ஈடுபடுவோரை கண்டறிந்து ஆரம்பத்திலேயே பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் தேவையின்றி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படாமல் தடுக்க முடியும்,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+