சிக்கன் விலை அதிரடியாக உயருகிறது.. திருப்பூர், கோவை, நாமக்கலில் அதிரடி முடிவு
திருப்பூர்: கோவையில் சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி மற்றும் ஈரோடு, திருப்பூரில் பல்லடம், திண்டுக்கல், நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இவர்கள் வளர்ப்பு கூலியை உயர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதனால் கோழி இறைச்சி விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே சிக்கன் விலை மார்கழி மாதத்தில் கூட குறையவில்லை. இப்போது மேலும் உயர்ந்தால் பாதிப்பு ஏற்படும்.
கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் அய்யப்பன் சாமிக்கு மாலை அணிந்து விரதம் இருப்பார்கள்.. இந்த சமயத்தில் சிக்கன் விலை, முட்டை விலை, மீன் விலை அதிரடியாக குறையும். ஆனால் வழக்கத்தைவிட உற்பத்தி குறைவு காரணமாக சிக்கன் விலை அதிமாகவே இருக்கிறது. முட்டை வெளிநாடுகளுக்கு, வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி ஆவதால் அதன் விலையும் கடுமையாக இருக்கிறது. மீன் விலையும் குறைந்தபாடில்லை.. இதனால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த சூழலில் கோழி உற்பத்தியாளர்களின் போராட்டம் காரணமாக சிக்கன் விலையும் அதிரடியாக உயரப்போகிறது. தமிழகத்தில் கோவை சுல்தான்பேட்டை பொள்ளாச்சி மற்றும் ஈரோடு, திருப்பூர் பல்லடம், திண்டுக்கல், நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் செயல்படுகின்றன. பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில் கறிக்கோழிகளின் கொள்முதல் விலை அதன் விற்பனை நிலவரத்துக்கு ஏற்ப தினமும் நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம்.
கடந்த 20-ந்தேதி ரூ.120 ஆக இருந்த கொள்முதல் விலை சிறிது, சிறிதாக அதிகரித்து தற்போது ரூ.133 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு சுமார் ரூ.100 முதல் ரூ.105 வரை செலவு ஏற்படுகிறது.
அண்மையில் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் அணி மற்றும் தமிழக மாநில விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்றது. இதில் கறிக்கோழி வளர்ப்பு கூலியை கிலோவிற்கு ரூ.6.50 என்பதை பண்ணை பராமரிப்பு செலவு அதிகரிப்பு, பண்ணை தொழிலாளர்கள் கூலி உயர்வு, மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளால் கிலோவிற்கு ரூ.20 என அடிப்படை உற்பத்தி கூலியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாட்டுக்கோழி வளர்ப்புக்கு கிலோ ரூ.25, காடை ஒன்றுக்கு ரூ.7 கூலியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 1-ந் தேதி முதல் தமிழகத்தில் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்யப்பட்டு அறிவித்தனர்.
அதன்படி நேற்று முதல் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கறிக்கோழி பண்ணை விவசாயிகள், உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கி உள்ளார்கள். இதனால் உற்பத்தி குறைந்து கறிக்கோழி கொள்முதல் விலை தற்போதைய விலையை விட மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள், ஓட்டல் உரிமையாளர்கள் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலைமை எழுந்துள்ளது. எனவே, இந்த பிரச்சனையில் அரசு உரிய பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications