திருப்பூர்.. உயர் மின் அழுத்த கோபுரத்திற்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம்.. பாடை கட்டி ஒப்பாரி
பல்லடம்: திருப்பூர்மாவட்டம், பல்லடத்தில் விவசாய விளைநிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நான்காவது நாளாக விவசாயிகள் பாடை கட்டியும் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பு நிலவி வருவதையொட்டி கடந்த 4 நாட்களாக 13 மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

விவசாயிகளின் இப்போராட்டத்திற்கு பல்வேறு கட்சியினரும் விவசாய சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளிப்பாளையத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நான்காவது நாளான இன்று பாடை கட்டியும் பெண்கள் ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.நான்கு நாட்களாகியும் இது வரை எந்த அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications