திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவிலுக்குள் காதல் ஜோடி சில்மிஷம்... பொதுமக்கள் துரத்தியதால் பைக்கில் லிப்ட் கேட்டு எஸ்கேப்

Google Oneindia Tamil News

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பூட்டிய கோவிலுக்குள் கும்மாளமிட்ட காதல் ஜோடியை, பொதுமக்கள் சுற்றிவளைத்ததால் சுவர் ஏறி குதித்து தப்பியோடினர்.

தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் உள்ளது மிகவும் பழமை வாய்ந்த நதிகிருஷ்ணன் கோவில். இங்கு பூஜை செய்யபடும் நாட்களை தவிர மற்ற நாட்களில் பூட்டபட்டிருக்கும்.

இந்த கோவிலின் மதில்சுவர் மீது காதல் ஜோடி ஒன்று ஏறி குதித்து உள்ளே சென்று வெகுநேரமாக கும்மாளமிட்டு கொண்டிருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர். கோவில் பூசாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

கோவிலுக்குள் ரன்னிங்

கோவிலுக்குள் ரன்னிங்

உடனடியாக கோவிலுக்கு விரைந்து வந்த பூசாரி பூட்டை திறந்து கோவிலுக்குள் சென்ற போது அங்கு இளம் காதல் ஜோடி சில்மிசத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பதை கண்டு சத்தம் போடவே திடுக்கிட்ட காதல் ஜோடிகள், கோவிலை சுற்றி, சுற்றி வந்தனர்.

வயலுக்குள் ஓட்டம்

வயலுக்குள் ஓட்டம்

இந்த நிலையில் பொதுமக்கள் சிலரும் கோவிலுக்குள் வந்து அவர்கள் இருவரையும் பிடிக்க முயன்ற போது அங்கும், இங்குமாக ஓடிய இருவரும் திடீரென கோவிலின் மதில் சுவரை லாவகமாக தாண்டி வயல் பகுதிக்குள் குதித்து ஓட தொடங்கினர்.

காதல் ஜோடி தப்பியது

காதல் ஜோடி தப்பியது

பொதுமக்கள் அவர்களை நிற்கும்படி சத்தம்போடவே விழுந்தடித்து ஓடிய காதல் ஜோடி மூச்சிரைக்க ரோட்டிற்கு வந்து அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரின் உதவியோடு அங்கிருத்து தப்பினர்.

கோவிலுக்குள் சில்மிஷம்

கோவிலுக்குள் சில்மிஷம்

அடிக்கடி வரும் காதல் ஜோடிகள், கள்ள காதலர்கள் அமராவதி ஆற்றங்கரையிலும், புதர்களிலும், லூட்டி அடித்து வந்த நிலையில், தற்போது பூட்டிய கோவிலுக்குள் புகுந்து சில்மிஷத்தில் ஈடுபடுவது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

English summary
In a locked temple in Dharapuram, the couple jumped out of the wall because the public rushed around
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X