ஆரம்பத்தில் என் சம்பளம் ரூ.400 தான்.. ஊதியம் குறைவு என கவலைப்படாதீர் -அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
திருப்பூர்: தனியார் நிறுவனங்களில் ஊதியம் குறைவாக கிடைப்பதாக இளைஞர்கள் மனம் தளரக்கூடாது என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

வெற்றிக்கான அடிக்கோலாக அந்த வேலையை இளைஞர்கள் கருத வேண்டும் என அமைச்சர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.

வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூரில் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி வளாகம் ஒன்றில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அதில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக அந்த விழாவில் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்தார்.

ரூ.400 ஊதியம்
மேலும், ஆரம்பக்காலத்தில் 400 ரூபாய் சம்பளத்திற்கு தான் ஒரு நிறுவனத்தில் தாம் வேலைக்கு சேர்ந்ததாகவும் அதுவும் அந்தக் காலக்கட்டத்திலேயே வேலைகிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்ததாகவும் தெரிவித்தார். மிகவும் கடினப்பட்டு அலைந்து திரிந்து வேலைக்கு சேர்ந்து 400 ரூபாய் ஊதியத்தை பெற்றதாக அவர் கூறினார்.

குறைந்த ஊதியம்
இதனால் தனியார்துறை நிறுவனங்களில் குறைந்த ஊதியம் தான் வழங்குகிறார்கள் என எண்ணி இளைஞர்கள் ஒதுங்காமல் அதனை முறையாக பயன்படுத்தி வெற்றிக்கான அடிக்கோலாக அமைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். உழைப்புக்கேற்ற பயன் நிச்சயம் நாளடைவில் கிடைத்தே தீரும் என நம்பிக்கையூட்டினார்.

உற்சாகம் தரும்
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் இந்தப் பேச்சு வேலைவாய்ப்பு முகாமில் குறைந்த ஊதியத்தில் பணிகள் கிடைத்தவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் அமைந்திருந்தது. இதனிடையே அமைச்சர் தன்னை முன்னுதராணமாக கூறியக் கருத்தை நெட்டிசன்கள் சிலர் வழக்கம் போல் விமர்சிக்கத் தவறவில்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications