ஆரம்பத்தில் என் சம்பளம் ரூ.400 தான்.. ஊதியம் குறைவு என கவலைப்படாதீர் -அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
திருப்பூர்: தனியார் நிறுவனங்களில் ஊதியம் குறைவாக கிடைப்பதாக இளைஞர்கள் மனம் தளரக்கூடாது என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

வெற்றிக்கான அடிக்கோலாக அந்த வேலையை இளைஞர்கள் கருத வேண்டும் என அமைச்சர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.

வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூரில் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி வளாகம் ஒன்றில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அதில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக அந்த விழாவில் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்தார்.

ரூ.400 ஊதியம்
மேலும், ஆரம்பக்காலத்தில் 400 ரூபாய் சம்பளத்திற்கு தான் ஒரு நிறுவனத்தில் தாம் வேலைக்கு சேர்ந்ததாகவும் அதுவும் அந்தக் காலக்கட்டத்திலேயே வேலைகிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்ததாகவும் தெரிவித்தார். மிகவும் கடினப்பட்டு அலைந்து திரிந்து வேலைக்கு சேர்ந்து 400 ரூபாய் ஊதியத்தை பெற்றதாக அவர் கூறினார்.

குறைந்த ஊதியம்
இதனால் தனியார்துறை நிறுவனங்களில் குறைந்த ஊதியம் தான் வழங்குகிறார்கள் என எண்ணி இளைஞர்கள் ஒதுங்காமல் அதனை முறையாக பயன்படுத்தி வெற்றிக்கான அடிக்கோலாக அமைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். உழைப்புக்கேற்ற பயன் நிச்சயம் நாளடைவில் கிடைத்தே தீரும் என நம்பிக்கையூட்டினார்.

உற்சாகம் தரும்
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் இந்தப் பேச்சு வேலைவாய்ப்பு முகாமில் குறைந்த ஊதியத்தில் பணிகள் கிடைத்தவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் அமைந்திருந்தது. இதனிடையே அமைச்சர் தன்னை முன்னுதராணமாக கூறியக் கருத்தை நெட்டிசன்கள் சிலர் வழக்கம் போல் விமர்சிக்கத் தவறவில்லை.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications