திருப்பூர்,கோவை தொழில் முனைவோருக்கு புதிய நெருக்கடி.. ரத்து செய்யப்படும் ஆர்டர்கள்.. என்ன நடக்கிறது?
திருப்பூர்: தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் இருந்து தான் ஜவுளி ஏற்றுமதி பெருமளவு நடக்கிறது. கோவை, ஈரோட்டில் ஆடைகள் உற்பத்தி அதிகமாக இருக்கிறது. திருப்பூரை பொறுத்தவரை பின்னாடை உற்பத்தி அதிகமாக உள்ளது. இந்த சூழலில் வளைகுடா போரால் செயற்கை நூலிழை விலை உயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் போரால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது தொழில்முனைவோர்களை நெருக்கடிக்கு தள்ளி உள்ளது.
கொங்கு மண்டலத்தின் முக்கிய நகரமான கோவையில் இருந்து ஜவுளி, வெட்கிரைண்டர், மோட்டார் பம்ப், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதிகிறது. இவை பெரும்பாலும் குவைத், ஷார்ஜா, சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். தற்போது ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பக்ரைன் உள்பட பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

போர் பதற்றம் காரணமாக பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் செங்கடல் பகுதியில் நிலவும் பதற்றத்தால் சரக்கு கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவையில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஜவுளி, வெட்கிரைண்டர் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. திருப்பூரில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் எனில், போர் பதற்றத்தால் ஹோர்முஸ் முனையை ஈரான் மூடியிருக்கிறது. இது எண்ணெய் போக்குவரத்து மட்டுமின்றி, வளைகுடா நாடுகளுக்கும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஜவுளி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் முக்கிய வழித்தடமாக இருந்து வந்தது. இந்த வழித்தடம் மூடப்பட்டதால் ஆப்பிரிக்காவை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டிக்கிறது இதனால் சரக்குகளை கொண்டு செல்ல 20 முதல் 25 நாட்கள் வரை தாமதம் ஏற்படுகிறது.
இது தொடர்பாக கோவை ஜவுளி தொழில் துறையினர் கூறுகையில், "ஹோர்முஸ் முனை மூடப்பட்டதால், நன்னம்பிக்கை முனை வழியாக ஆப்பிரிக்காவை சுற்றி சரக்குகளை கொண்டு செல்லும்போது தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த நேரத்தில் வர்த்தகம் நடைபெறுவது தடைபட்டிருக்கிறது. மேலும் போக்குவரத்து செலவு, ஆர்டர்கள் ரத்து, கட்டாயத் தள்ளுபடி விலைக்கு விற்க வேண்டிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
அதேபோல் ஹோர்முஸ் முனை மூடப்படுவதால் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக செயற்கை நூலிழையின் விலை உயரும் அபாயம் இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர், வளைகுடா நாடுகளுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் போர் பதற்றத்தால் ஏற்றுமதி குறையும் நிலை உருவாகி உள்ளது என்று கவலை தெரிவித்தனர்.
இது ஒருபுறம் எனில் போர் பதற்றம் காரணமாக வெளிநாட்டு வர்த்தகர்கள் கடந்த சில நாட்களாக ஆர்டர்களை ரத்து செய்து வருகின்றனர். இதனால் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கி வருவதால் தொழில் முனைவோர்கள் முடங்கி உள்ளனர்.
-
கோவை, நீலகிரியில் விட்டு விளாச போகுது மழை! கொளுத்தும் வெயிலுக்கு வானிலை மையம் ”ஜில்” அப்டேட் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி.. இலவசமாக நகை மீட்கலாமா? ஆசையில் விழும் மக்கள் கவனிக்க வேண்டியது -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட் -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் -
நெருப்பு வளையத்தில் இந்தியா! மோடி எடுத்த முடிவால்! போருக்குள் இழுக்க பார்க்கும் இஸ்ரேல்! கையை மீறுது -
ராஜ்யசபா எம்.பி ஆகும் 6 பேர் யார் யார்? திமுக, அதிமுக, தேமுதிக, பாமக இன்று அறிவிக்க திட்டம்! -
சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் நறுக்குன்னு ஸ்ருதி கேட்ட கேள்வி.. அண்ணாமலை எடுத்த முடிவு! மீனாவின் விபரீத செயல் -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
கருணாஸ் காட்டில் மழை தான்.. கடைக்கண் பார்வையை திருப்பிய ஸ்டாலின்! கண்டிப்பா அங்க தான் போட்டியாம்!














Click it and Unblock the Notifications