Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொங்கு நாட்டிலும் தண்ணீர் பஞ்சம்.. திருப்பூர் தாராபுரத்திலும் ராமநாதபுரம் நிலைமை.. வீடியோவை பாருங்க

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: "கொங்கு நாட்டிலும் தண்ணீர் பஞ்சம்" என்ற பதிவில் நீர்நிலை ஆர்வலரான நிர்மல் ராகவன் வெளியிட்ட பதிவில் நான் இதுவரை நினைத்தது தவறு என்பதை இன்று இங்கு வந்தபோது தான் புரிந்தது. தாராபுரம் அருகேயும் இவ்வளவு கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் அளித்தது. இராமநாதபுரத்தில் காணும் நிலைமை, அப்படியே இதே மாதிரி காட்சிகளை இங்கும் பார்த்தேன் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் ( நகரம் மற்றும் பாதி மாவட்டம்), தூத்துக்குடி (பாதி மாவட்டம் மட்டும்), புதுக்கோட்டை (ஒரு பகுதி மாவட்டம்), வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் போன்ற மாவட்டங்கள் தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான உள்ளன.

Situation in Dharapuram and Ramanathapuram Tiruppur district Watch the video

மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான ஊர்களில் தண்ணீர் பஞ்சம் என்பது கிடையாது. தண்ணீர் பஞ்சம் அதிகம் உள்ள மாவட்டம் என்றால், அது ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் ஆகியவை தான். இந்த மாவட்டங்களில் ஆறுகளில் தண்ணீர் இல்லை. மழையும் குறைவு என்பதால் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த மாவட்டங்களுக்கு அண்டை மாவட்ட ஆறுகள் மூலம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் விநியோக செய்யப்படுகிறது.

நீர்நிலை ஆர்வலரான நிர்மல் ராகவன் தமிழகத்தின் மாவட்டங்களில் நீர் நிலைகளை மேம்படுத்தும் பணிகளை செய்து வருகிறார். ஊர் ஊராக தேடி தேடி கண்டுபிடித்து தண்ணீர் பஞ்சத்தை போக்க குளம், ஏரிகளை தூர் வாரி சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு குளங்களை மேம்படுத்தி உள்ளார்.

நிர்மல் ராகவன் "கொங்கு நாட்டிலும் தண்ணீர் பஞ்சம்" பெயரில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "இத்தனை ஆண்டுகளாக தண்ணீர் பஞ்சம் இருக்கும் எல்லா இடங்களுக்கும் நான் சென்று பார்த்திருக்கிறேன். பல மாவட்டங்களுக்கு சென்றிருக்கிறேன். தமிழ்நாட்டின் பல பகுதி மக்கள் சந்திக்கும் தண்ணீர் பிரச்சனைகளை பார்த்திருக்கிறேன்.இந்தியாவின் பல மாநிலங்களிலும், சில வெளிநாடுகளிலும் கூட இந்த பிரச்சனையை நேரில் கண்டிருக்கிறேன்.

அதே மாதிரி, இராமநாதபுரம் பகுதியில் தண்ணீர் பஞ்சம் பற்றி பேசும்போது, இந்த மாதிரி வண்டி இராமநாதபுரத்திலும் அதற்கும் அருகில் உள்ள சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில்தான் இருக்கும் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், நான் இதுவரை நினைத்தது தவறு என்பதை இன்று இங்கு வந்தபோது தான் புரிந்தது. தாராபுரம் அருகேயும் இவ்வளவு கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் அளித்தது.

இராமநாதபுரத்தில் காணும் நிலைமை, அப்படியே இதே மாதிரி காட்சிகளை இங்கும் பார்த்தேன். இது எனக்கு மிகவும் ஆச்சரியமாய் இருந்தது. கொங்கு பகுதியை நான் எப்போதும் செழித்து விளையும் விவசாயப் பகுதி என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இங்கேயும் தண்ணீர் பிரச்சனை மிகக் கடுமையாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதற்கான காரணங்களையும் அறிந்துகொண்டேன். சரி செய்ய வேண்டிய பணிகளை அடுத்தடுத்து செய்து வருகிறோம். இதற்கு முன்பு நான் போட்ட பதிவில், இந்த வண்டி எங்கு எடுத்தது என்று கேள்வி கேட்டிருந்தேன். அதற்கு அனைவரும் தவறாக இராமநாதபுரம் என்று பதில் சொல்லியதால், யாருக்கும் பரிசு இல்லை!" இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+