திமுக வேட்பாளரை டெபாசிட் இழக்க வைத்த பாஜக.. குண்டு வைத்த குண்டடம் வாக்காளர்கள்..எதிர்பாராத ட்விஸ்ட்!
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்திலுள்ள குண்டடம் 9வது வார்டில் திமுக 13 கட்சிகளின் கூட்டணியுடன் போட்டியிட்டு வெறும் 30 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், இந்த வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 211 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சி முடிவுகளில் திமுக அனைத்திலும் முன்னிலையில் உள்ளது. 21 மாநகராட்சிகளிலும் திமுகவே முன்னிலையில் உள்ள நிலையில் திருப்பூர் மாநகராட்சியிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.
மேலும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான நகராட்சி பேரூராட்டிகளையும் திமுகவே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தது. திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தற்போது வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் ருத்திராவதி பேரூராட்சியில் உள்ள மொத்தம் 15 வார்டுகளில் 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 8வது வார்டு சுயேட்சை வேட்பாளர் திருமதி வேலுமணி, 14வது வார்டு அதிமுக வேட்பாளர் சுமதி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் பல பகுதிகளிலும் வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள பகுதிகளிக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது.

குண்டடம் ஊராட்சி ஒன்றியம்
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்ட நிலையில் தமிழகம் போலவே திருப்பூரிலும் திமுக வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் மாநகராட்சி திமுக கைப்பற்றி நிலையில் உடுமலைப்பேட்டை பல்லடம் தாராபுரம் காங்கேயம் திருமுருகன்பூண்டி உள்ளிட்ட நகராட்சிகளில் திமுக கைப்பற்றியது.

அதிர்ச்சி கொடுத்த பாஜக
இதேபோல 15 பேரூராட்சிகளில் திமுக 14 பேரூராட்சி களையும் அதிமுக ஒரு பேரூராட்சியையும் கைப்பற்றியுள்ளது. தேர்தலில் எதிர்பாராத விதமாக 13 கூட்டணி கட்சிகளுடன் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒருவர் திமுக வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. குண்டடம் 9வது வார்டில் 13 கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெறும் 30 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், இந்த வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 211 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கிருத்திகா ருத்திரகுமார்
9வது வார்டு போட்டியிட்ட பாஜக பிரமுகரின் ருத்திரகுமார் என்பவரது மனைவியான கிருத்திகா ருத்திரகுமார் சுமார் 77 சதவீத வாக்குகள் அதாவது 211 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான பாலாமணி என்பவர் 22 சதவீதம் வாக்குகள் அதாவது 63 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இதுதவிர கிருத்திகாவை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திமுக வேட்பாளர் வெறும் 30 வாக்குகள் மட்டுமே பெற்று உள்ளது கவனிக்கத்தக்கது
-
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications