Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூர் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன்.. மறைந்தும் வாழ போகிறார்.. நெகிழ வைத்த குடும்பத்தினர் முடிவு

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏவாக பதவி வகித்தவர் குணசேகரன். 58 வயதான இவர் அதிமுகவின் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். இவர் 2016 முதல் 2021 வரை திருப்பூர் தெற்கு தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்ற குணசேகரன் இன்று காலை காலமானார். இவரது உடலுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமனி உள்பட அதிமுக தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏவாக பதவி வகித்தவர் குணசேகரன். 58 வயதான இவர் அதிமுகவின் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கோவை தனியார் மருத்துவமனையில் குணசேகரன் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். கடந்த 2001 முதல் 2006 வரை திருப்பூர் நகராட்சி கவுன்சிலராக இருந்த இவர். 2011 முதல் 16 வரை திருப்பூர் மாநகராட்சி துணை மேயராக பதவி வகித்தார்.

Tiruppur ex mla Family of former Tiruppur MLA Gunasekaran donates his eyes

2016 முதல் 2021 வரை திருப்பூர் தெற்கு தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தார். தற்போது மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகிக்கிறார். அவரது உடல் மதியம் 12 மணிக்கு திருப்பூர் ராக்கியபாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

அவரது மறைவை தொடர்ந்து அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.பி.வேலுமனி, முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், தாமோதரன், திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதேபோல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, கரைப்புதூர் நடராஜன், என்.எஸ்.நடராஜன், எதிர்க்கட்சி குழு தலைவர் அன்பகம் திருப்பதி, எதிர்க்கட்சிக் குழு கொறடா கண்ணப்பன் உட்பட அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் மலர் வளையம் வைத்தும், மாலை அணிவித்தும், கட்சிக்கொடி போர்த்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அவர் மறைந்த பிறகும் அவரது கண்கள் தானம் செய்யப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+