திமிறி எழும் திருப்பூர்.. அமெரிக்க வரியால் பாதிப்பில்லை! கைகொடுக்கும் UK.. ஏற்றுமதியாளர் நம்பிக்கை
திருப்பூர்: அமெரிக்காவின் வரி விதிப்பால் நிறுவனங்கள் திருப்பூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டதாக தவறான தகவல்கள் பரவி வருகின்றன, இது முற்றிலும் பொய்யான தகவல் எனவும், மாநில அரசு மின்கட்டணத்தைக் குறைத்து அறிவித்தால் அமெரிக்கா வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு ஆறுதலாக இருக்கும் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத் தலைவர் சக்திவேல் கூறியுள்ளார்.
திருப்பூர் 52வது நிட்பேர் எனும் பின்னலாடை கண்காட்சி 12ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இது குறித்த செய்தியாளர் சந்திப்பு திருப்பூரில் நடைபெற்றது.
இதில் பேசிய ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத் தலைவர் சக்திவேல், "தற்போதைய சூழலில் இந்தக் கண்காட்சி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. யூகே உடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு நடக்கும் கண்காட்சி என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருப்பூர் ஏற்றுமதி
யுகே உடனான 1 பில்லியன் ஏற்றுமதி 2 பில்லியன் வரை உயர வாய்ப்பு உள்ளது. மேலும் ஐரோப்பாவுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்ய மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இது ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க உதவும். கண்காட்சியில் 60 ஏற்றுமதியாளர்கள் தங்கள் ஸ்டால்களை அமைத்துள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஆப்பிரிக்கா உள்ளிட்ட 200 புதிய வர்த்தகர்கள் வர வாய்ப்புள்ளது.
அமெரிக்க வரி
5 வாரங்களுக்குள் அமெரிக்க வரி விதிப்புக்கு தீர்வு வரும். டிரம்ப் தற்போது இந்தியா வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை மூலம் மீண்டும் இயல்பு நிலை திரும்பும். சுமூக தீர்வு எட்டப்படும். அமெரிக்க வரி விதிப்பால் நிறுவனங்கள் மூடப்பட்டதாக தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இது முற்றிலும் தவறு. அமெரிக்காவிற்கு மட்டும் ஏற்றுமதி செய்த நிறுவனங்கள் மட்டும் லேசான பாதிப்பை சந்தித்துள்ளன. அவர்களுக்கும் விலை சலுகை மூலம் தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன.
ஆடை தொழில்
எந்த ஒரு நபருக்கும் வேலை இழப்பு ஏற்படவில்லை. கடந்த ஆண்டு 45 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்த நிலையில் இந்த ஆண்டு வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மூலம் 15 சதவீதம் கூடுதல் ஏற்றுமதி நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு ஏற்றுமதிக்கு 15 சதவீதம் கூடுதல் மானியம் வழங்க வேண்டும், மாநில அரசு மின்கட்டணத்தை குறைத்து அறிவித்தால் இந்த நிலையில் பயனுள்ளதாக இருக்கும். ஜி.எஸ்.டி வரி குறைப்பு உள்நாட்டு வர்த்தகம் சிறக்கும், மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார்.
வேலை இழப்பு
முன்னதாக, அமெரிக்காவின் வரிவிதிப்பால், அமெரிக்காவில் குளிர்காலத்தை குறிவைத்து ஆர்டர் எடுத்திருந்த ஏற்றுமதியாளர்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்ததாகக் கூறப்பட்டது. ஏற்கனவே ஆர்டர் கொடுத்தவர்கள் தற்போதைக்கு அந்த ஆர்டர்களை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளனர். டாலர் மதிப்பு அதிகரிப்பால் ஏற்கனவே பெற்ற ஆர்டர்களை ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் இருக்கிறது. ஏற்கனவே வரி விதிப்பு அமலுக்கு வந்திருக்கும் நிலையில் அமெரிக்காவில் 100 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய ஆடைகள் 130 முதல் 150 ரூபாய் வரை விற்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதனைத் தவிர்ப்பார்கள் என உற்பத்தியாளர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications