திருப்பூர் ஈஸ்வரி வாங்கிய உடனே தொலைந்த தங்கம்.. இன்ப அதிர்ச்சி தந்த இளைஞர்.. நேர்மைக்கு பரிசு
திருப்பூர்: திருப்பூர் செட்டிபாளையம் வஉசி நகர் பகுதியை சார்ந்தவர் ஈஸ்வரி, பனியன் தொழிலாளி ஆன இவர் நேற்று திருப்பூர் கலைஞர் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நகை கடைக்கு சென்று தான் அணிந்திருந்த தாலி செயினை மாற்றி புதிதாக சுமார் 2 லட்சம் மதிப்பில் 11 கிராம் தாலி செயினை வாங்கியுள்ளார். பின்னர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது மணி பர்ஸ் சாலையில் தவிறி விழுந்தது. அதில் தங்க தாலி அப்படியே மிஸ்ஸானது. இந்லையில் செட்டிபாளையம் பெண்மணி ஈஸ்வரி தவறவிட்ட 11 கிராம் தாலி செயினை மணிகண்டன் என்பவர் ஒப்படைத்தார். அவரை காவல்துறையினர் பொன்னாடை போர்த்தி பாராட்டினார்கள்.
திருப்பூர் செட்டிபாளையம் வஉசி நகர் பகுதியை சார்ந்தவர் ஈஸ்வரி. பனியன் தொழிலாளி ஆன இவர் நேற்று திருப்பூர் கலைஞர் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நகை கடைக்கு சென்றுள்ளார். அங்கு தான் அணிந்திருந்த தாலி செயினை மாற்றி புதிதாக சுமார் 2 லட்சம் மதிப்பில் 11 கிராம் தாலி செயினை வாங்கியுள்ளார். தொடர்ந்து பேருந்து மூலம் செட்டிபாளையம் வந்துள்ளார் ஈஸ்வரி.

தவறி விழுந்த தங்கம்
அங்கு பேருந்து நிறுத்தத்தில் உள்ள கடையில் தேவையான பொருட்களை வாங்கிய பின்னர் கைப்பையை மூடாமல் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சமயம் அவரது கைப்பையில் இருந்த நகை வாங்கி வைத்திருந்த மணி பர்ஸ் சாலையில் விழுந்துள்ளது. அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த, கருவம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் கீழே கடந்த அந்த மணி பர்சை எடுத்து அருகில் இருந்தவர்களிடம் யாராவது பர்சை தவறவிட்டு சென்று விட்டார்களா என விசாரித்துள்ளார்.
மணி பர்ஸ் தொலைந்தது
தொடர்ந்து வீட்டில் இருந்து பேருந்து நிறுத்தம் வரை தேடிவந்த அவர், பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்த கடை உரிமையாளர்களிடம் கேட்டுள்ளார். ழுது ஒரு நபர் பரிசை எடுத்துள்ளதாகவும் அவருடைய நம்பரை கொடுத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து அந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்ட ஈஸ்வரி தனது மணி பர்ஸ் தான் தொலைந்து விட்டதாகவும் அதில் இன்று புதிதாக வாங்கி வந்த தாலி செயின் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உறுதி செய்த ஈஸ்வரி
இதனைத் தொடர்ந்து மணிகண்டன் திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையத்திற்கு வந்து உரிய ஆவணங்களை கொடுத்து நகையை பெற்றுச் செல்லுமாறு தெரிவித்தார். தொடர்ந்து காவல் நிலையத்திற்கு சென்று அந்த நகையை போலீசாரிடம் ஒப்படைத்தார்.அதன் பின்னர் அங்கு வந்த ஈஸ்வரி தான் நேற்று வாங்கிய நகைக்கான ரசீதை காட்டி தனது நகை தான் என்பதை உறுதி செய்தார்.
நகை ஒப்படைப்பு
இதனை தொடர்ந்து ஈஸ்வரியிடம் போலீசார் நகையை ஒப்படைத்தனர். மேலும் கீழே கிடந்த 2 லட்சம் மதிப்பிலான நகையை உரியவரிடம் ஒப்படைத்ததற்காக மணிகண்டனை நல்லூர் சரக உதவி ஆணையர் தையல்நாயகி மற்றும் வீரபாண்டி காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் போலீசார் பொன்னாடை போர்த்தி அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர். அண்மையில் துப்புரவு பணியாளர் சென்னையில் தவறவிட்ட தங்க நகையை திரும்ப ஒப்படைத்தார். அதன்பின்னர் அதேபோன்ற இரண்டு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தன. அந்த வரிசையில் திருப்பூரிலும் சம்பவம் நடந்துள்ளது.
-
நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications