Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரில் நபிகள் நாயகம் குறித்து அவமதிப்பு.. காவல் நிலையம் முற்றுகை.. பனியன் குடோன் ஓனர் கைது

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் காதர் பேட்டையில் பனியன் குடோன் நடத்தி வரும் சுந்தர்ராஜ் என்பவர், சமூக வலைதளத்தில் நபிகள் நாயகம் குறித்து அவமதிக்கும் நோக்கத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருப்பூர் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் முஸ்லிம் மக்கள் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், வீரபாண்டி பிரிவை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரை கைது செய்தனர்.

திருப்பூர் காதர் பேட்டையில் பனியன் குடோன் நடத்தி வரும் சுந்தர்ராஜ் என்பவர், சமூக வலைதளத்தில் அண்மையில் நபிகள் நாயகம் குறித்து அவமதிக்கும் நோக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திருப்பூர் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் முஸ்லிம் மக்கள் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் ஏற்கனவே இது குறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது.

tirupur muslim


இதையடுத்து கடந்த நேற்று முன்தினம் இரவு திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஏராளமானோர் குவிந்தனர். அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் பேச்சுவார்ததை நடத்தியதுடன், உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் இருந்து அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் அனைவரும் கலைந்து சென்றனர். இந்தநிலையில் நபிகள் நாயகம் குறித்து அவமதிப்பு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட குற்றத்திற்காக, திருப்பூர் காதர்பேட்டையில் பனியன் குடோன் வைத்துள்ள, வீரபாண்டி பிரிவை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 52) என்பவரை திருப்பூர் வடக்கு போலீசார் நேற்று கைது செய்தனர்.


திருப்பூர் குற்றம்: திருப்பூரில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள 47 செல்போன்களை திருடிய வடமாநில தொழிலாளியை போலீசார் நேற்று கைது செய்தனர். திருப்பூர் கருவம்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்த 40 வயதாகும் பாலமுருகன், திருப்பூர் மத்திய பஸ் நிலையம் எதிரே பெட்ரோல் பங்க் பக்கத்தில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். பாலமுருகன் செல்போன் கடையை கடந்த அக்டோபர் 3ம் தேதி இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் இவருடைய கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை அங்கிருந்து ஆட்டோ டிரைவர்கள் பார்த்து பாலமுருகனுக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக இது குறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு பாலமுருகன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதில் கடையில் இருந்த 47 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.7 லட்சத்து 71 ஆயிரம் என்று பாலமுருகன் போலீசாரிடம் கூறினார். இதையடுத்து திருப்பூர் தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையிலான தனிப்படையினர் உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கினார்கள். அப்பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி தேடினார்கள். இதில் மர்ம ஆசாமி ஒருவர் பையுடன் ஆட்டோவில் ஏறியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆட்டோ டிரைவரிடம் விசாரித்த போது அந்த நபர் ஆத்துப்பாளையம் பகுதியில் இறக்கி விட்டதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் சென்று போலீசார் விசாரித்த போது சம்பந்தப்பட்ட நபரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீத் தாகூர் (39) என்பதும், இவர் ஆத்துப்பாளையம் பகுதியில் தங்கி இருந்து பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. செல்போன் கடைக்கு முன்பு படுத்து தூங்குவது போல் நடித்து நவீன கட்டர் எந்திரத்தை வைத்து பூட்டை உடைத்து அவர் திருடியது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் இருந்த 47 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சீத் தாகூரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+