பாஸ்வேர்டு எங்க? ஃபோட்டோகிராஃபர் ஆக்கிட்டீங்களே.. சிரிப்பலையில் மூழ்கிய உதயநிதி பிரச்சாரம்
காங்கேயம்: பிரச்சாரத்தின் போது, செல்பி எடுக்கச் சொன்ன இளைஞர்களை கலாய்த்து உதயநிதி ஸ்டாலின் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video

இன்னும் கூட்டணியே முடிவாகாத நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரத்தை முழு ஆளாய் தொடங்கி முழு வீச்சில் சுழன்று வருகிறது திமுக.
ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, உதயநிதியின் ஒவ்வொரு விசிட்டும் திமுகவின் இதர தலைவர்களின் கண்களே விரியும் அளவுக்கு வரவேற்பு தடபுடலாக உள்ளது.

தடபுடல் வரவேற்பு
சமீபத்தில், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மகனும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமையில், 100 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட மாலையை கிரேன் மூலம் உதயநிதிக்கு போட்டு 'பாகுபலி' வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதுவும் ஒரு குட்டி ஸ்டோரி
இந்நிலையில், காங்கேயத்தில் இன்று உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் தனது பிரச்சார வாகனத்தில் பேசிக் கொண்டே வந்த பொழுது, அங்கு கூடிய இளைஞர்கள் அவரிடம் செல்பி எடுக்க வேண்டி தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.

என்னய ரொம்ப படுத்துறீங்க டா!
சரி.. மொபைல் கொடுங்க என்று உதயநிதி கேட்க, பலரும் தங்கள் மொபைலை அவரிடம் கொடுக்க முற்பட, கூட்டத்தில் ஒருவர் உதயநிதியை நோக்கி அவரது போனையே வீசிவிட்டார். எப்படியோ அதை தவறவிடாமல் பிடித்துவிட்ட உதயநிதி, போட்டோ எடுக்க மொபைலை ஆன் செய்தால், அது பாஸ்வேர்ட் கேட்க மனிதர் கடுப்பாகிவிட்டார்.

எப்படி போட்டோ எடுக்குறது?
அந்த நபரை பார்த்து, 'பாஸ்வேர்டு எங்க?' என்று சிரித்துக் கொண்டே கேட்ட உதயநிதி, அவரை அடிப்பது போல், 'இந்தா வச்சிக்க.. போனை தூக்கிப் போட்டுட்ட.. பாஸ்வேர்ட் இல்லாம நா எப்படி போட்டோ எடுக்குறது' என்று கிண்டல் செய்தார்.

போட்டோகிராஃபர் ஆக்கிட்டீங்க
பிறகு மற்றொரு நபரிடம் இருந்து மொபைல் வாங்கி, வெவ்வேறு ஆங்கிளில் செல்பி எடுத்த உதயநிதி, 'உங்கள்ட்ட பேசலாம்-னு வந்தா, கடைசியில என்ன ஃபோட்டோகிராஃபர் ஆக்கிட்டீங்களே!" என்று பன்ச் அடிக்க, கூட்டம் சிரிப்பலையில் மூழ்கியது.












Click it and Unblock the Notifications