தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் நிராகரித்த மாணவி.. அரசு உதவுமாறு கண்ணீர்
திருப்பூர்: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் தனியார் மருத்துவ கல்லூரியில் படிப்பு செலவை அரசே ஏற்பதாக அறிவித்தும் மருத்துவப் படிப்பை படிக்கமுடியாமல் போனதாக அரசு பள்ளி மாணவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும் தனது மருத்துவர் கனவை நனவாக்க அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தளி பகுதியை சார்ந்தவர் துல்பியா. இவரது தந்தை வாகன ஓட்டுநர். பொருளதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தாலும் பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நல்ல முறையில் படித்து வந்த துல்பியா ஆசிரியர்கள் உதவியோடு நீட் தேர்வும் எழுதி தேர்ச்சி பெற்றார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு அறிவித்த 7.5 இடஒதுக்கீட்டின்படி தனியார் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தபோதும் பணம் கட்ட முடியாததால் கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வந்தார். ஒதுக்கபட்ட இடத்தில் துல்பியா சேராததால் இவருக்கு பின் உள்ளவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது.
இதனிடையே தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்பு செலவை அரசே ஏற்பதாக அறிவித்தது. இருப்பினும் துல்பியாவுக்கு இடம் கிடைத்தும் அவரால் பணம் செலுத்த முடியாததால் வேண்டாம் என தெரிவித்துவிட்டதால் அந்த இடம் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டது.
இதனால் அரசின் அறிவிப்பு இவரை போன்ற மாணவர்களுக்கு பலனின்றி போய்விட்டது. எனவே அரசு தனக்கு மருத்துவப் படிப்பை படிக்க ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டுமென துல்பியா தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க வீடியோவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications