Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரில் இப்படியும் ஒரு கணவர்.. வீணான மனைவிக்கான போராட்டம்.. அதற்காக இப்படியா?

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் முத்தணம்பாளையம் பகுதியில் 48 வயதாகும் ஜான் கென்னடி என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி அலோசியகவிதா. இந்த தம்பதிக்கு 19 வயதில் மகள் இருக்கிறார். இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். ஜான் கென்னடியின் மனைவி அலோசியகவிதா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவர் தற்போது உயிருடன் இல்லை. இதனால் ஜான் கென்னடி தவறான முடிவெத்து வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனைவி மீது அதிக பாசம் வைத்துள்ள கணவர், அவரை பிரிந்து வாழ முடியாமல் தவிப்பார்கள். அப்படியான நிலையில் ஆறுதலான உறவுகள் அவருடன் இருக்க வேண்டும். அப்படியான உறவுகள் உடன் இல்லாமல் போனால், அது பெரிய சிக்கலில் தான் முடியும் . ஏனெனில் அவர்கள் ஆறுதலான பேச்சுக்களையே, நம்பிக்கையான வார்த்தைகளோ இல்லாமல் உடைந்து போவார்கள். அப்படியான சூழலில் ஒருவர் மனநல சிகிக்சை பெற வேண்டும். எந்த நிலையிலும் வாழ்க்கையை முடித்துக் கொள்வது போன்ற கோழைத்தனமான முடிவுகளை எடுக்கவே கூடாது.. திருப்பூர் அருகே நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

What did John Kennedy of Muthanampalayam Tiruppur do for his wife

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி-விஜயமங்கலம் இடையே ரயில்வே தண்டவாளத்தில், நேற்று முன்தினம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து, ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பிணமாக கிடந்தவர், கோவையிலிருந்து சென்னை சென்ற கோவை எக்ஸ்பிரஸ் முன் பாய்ந்து வாழ்க்கையை முடித்துக்செய்து கொண்டது தெரியவந்தது.

ஆனால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இதையடுத்து அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் ரயில் முன் பாய்ந்து வாழ்க்கையை முடித்துக் கொண்டவர், திருப்பூர் முத்தணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 48 வயதாகும் ஜான் கென்னடி என்பது தெரியவந்தது. இவரது மனைவி அலோசியகவிதா. இந்த தம்பதிக்கு 19 வயதில் மகள் இருக்கிறார். இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், ஜான் கென்னடியின் மனைவி அலோசியகவிதா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் ஜான் கென்னடி பலரிடம் கடன் வாங்கி, அலோசியகவிதாவுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அலோசியகவிதா இறந்து விட்டார். அன்று முதல் மனைவி இறந்த சோகம் ஒருபுறம், கடனைத் திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டது மற்றொரு புறம் என ஜான் கென்னடி மன வேதனையில் இருந்தார். எனவே இனி வாழ வேண்டும் என்று தவறான முடிவு எடுத்து ரயில் முன் பாய்ந்து வார்ககொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்

Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).

மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).

ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.

AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+