திருப்பூரில் நள்ளிரவில் சுவர் ஏறி குதித்த 27 வயது காமுகன்.. 75 வயது மூதாட்டிக்கு ஏற்பட்ட நடுக்கம்
திருப்பூர் பிச்சம்பாளையம் புதூர், இந்திரா நகரைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர், இரவு தனது வீட்டின் வெளிவளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென வீட்டின் மதில் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தார். பின்னர் வீட்டின் கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த அந்த மூதாட்டியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி சத்தம் போடவே, வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த அவரது மகன் கதவை உடைத்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். இதைப் பார்த்ததும் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

அங்கிருந்து அரை நிர்வாணமாக தப்பிய அந்த நபர், அருகில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் ஓட்டைப் பிரித்து உள்ளே நுழைய முயன்றார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி சத்தம் போடவே, அங்கிருந்தும் விரட்டப்பட்டார். தொடர்ந்து காமாட்சியம்மன் கோவில் வீதிக்குச் சென்ற அவர், அங்கு வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களின் 2 விலையுயர்ந்த மொபைல் போன்களையும் திருடிக்கொண்டு தப்பினார்.
அதன் பிறகும் அடங்காத அந்த நபர், கிருஷ்ணர் வீதிக்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த 75 வயது மூதாட்டி ஒருவரிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடி வரவே, அந்த நபர் அங்கிருந்தும் தப்பியோடி தலைமறைவானார்.
ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த இந்த தொடர் அத்துமீறல் சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, மூதாட்டிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, மொபைல் போன்களைத் திருடிச் சென்றது திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, அண்ணன்தல் கிராமம், பள்ளிக்கூடத்து வீதியைச் சேர்ந்த ரகுபதியின் மகன் வீரராகவன் (வயது 27) என்பது தெரியவந்தது. தற்போது திருப்பூர் ஸ்ரீ நகரில் குடியிருந்து பனியன் நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த வீரராகவனைப் போலீசார் இன்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்














Click it and Unblock the Notifications