மிக்சியை கொண்டு போய் விற்று.. சரக்கும் மட்டனும் வாங்கிய கணவர்.. கட்டையால் அடித்தே கொன்ற மனைவி!

கணவனை கட்டையால் அடித்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: "வீட்டில் இருந்த மிக்சியை எடுத்துட்டுபோய், கடையில வித்து.. சரக்கு பாட்டிலும், மட்டனும் வாங்கினார்.. அந்த ஆத்திரத்தில்தான் புருஷனை மரக்கட்டையால் அடித்து கொன்னுட்டேன்" என்று மனைவி வாக்குமூலம் தந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியை சேர்ந்த தம்பதி வெங்கடேசன் - உமாதேவி. உமாதேவிக்கு 47 வயதாகிறது. இவர்களுக்கு 21 வயதில் நிவேதன் என்ற மகன் உள்ளார்.

wife killed husband near tirupur

தம்பதி இருவரும் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாசத்துக்கு முன்பு வீட்டின் மாடிப்படியில் இருந்து வெங்கடேசன் தவறி கீழே விழுந்துவிட்டார்.

அதனால் காலில் கட்டு போட்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்... வேலைக்கும் போகவில்லை.. வீட்டில் ரெஸ்ட் எடுக்கும் சமயத்தில், குடிப்பழக்கத்துக்கும் வெங்கடேசன் ஆளாகிவிட்டார். ஏற்கனவே வேலைக்கு போகாததால், வருமானம் இல்லாமல் குடும்பம்தவித்து வந்தது.. இதனால் குடிப்பழக்கத்தை ருசி கண்ட வெங்கசேடன், வீட்டில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வித்து குடிக்க ஆரம்பித்தார்.

கடந்த 17-ந் தேதி, பைக்கில் இருந்து கணவர் கீழேவிழுந்துவிட்டார் என கூறி திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு உமாதேவி அழைத்து சென்றார். முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள், உடனே கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகுமாறு சொன்னார்கள். வாகன விபத்து என்பதால் இது சம்பந்தமான போலீசாரின் விசாரணையும் ஆரம்பமானது. இதனிடையே சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் இறந்து விடவும் அவரது சொந்த ஊரில் இறுதி சடங்கு நடந்தது.

இந்த சமயத்தில்தான், வெங்கடேசனின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது. அதில், வெங்கடேசன் பைக்கில் இருந்து கீழே விழுந்து இறக்கவில்லை, தலையில் யாரோ தாக்கி கொலை செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மங்கலம் போலீசார், உமாதேவியிடம் விசாரித்தனர். ஆனால், அவர் எதைஎதையோ உளற ஆரம்பித்தார். இதன்பிறகுதான் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை சொன்னார். அந்த வாக்குமூலம் இதுதான்:

"நான் 17-ந் தேதி வேலைக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்தேன்... மது பாட்டிலும் மட்டனும் வாங்கி என் கணவர் வைத்திருந்தார். இதுக்கு ஏது பணம் என்று கேட்டேன்.. வீட்டில் இருந்த மிக்சியை வித்துதான் இதை வாங்கினேன்னு சொனன்ர். அதனால் எங்களுக்குள் சண்டை வந்தது.. என்னை அடிக்க வந்தார்.

நான் கோபத்தில் கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்து அவரை அடிச்சிட்டேன்.. கீழே மயங்கி விழுந்து இறந்துட்டாரு.. வெளியே தெரிந்தா சிக்கல் ஆயிடும் என்று நினைத்துதான், பைக்கில் இருந்து கீழே விழுந்தார் என்று சொல்லி, ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை செய்ய தூக்கி சென்று நாடகம் ஆடினேன்" என்றார். இப்போது உமாதேவி கோவை ஜெயிலில் உள்ளார்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+