காதலனுடன் தகராறு!.. விஷம் குடித்து உயிரை விட்ட பெண் போலீஸ் பர்வீன் பாபி!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: காதலர்களுக்கு இடையே தகராறு.. கடைசியில் தற்கொலை வரை சென்றுவிட்டார் பெண் போலீஸ் பர்வீன் பாபி!

திருப்பூர் முதலிபாளையம் பிரிவு அருகே உள்ள அங்காளம்மன் நகரில் வசித்து வந்தவர்தான் பர்வீன் பாபி. வயசு 23. ஒரு வருஷமாக திருப்பூர் ஆயுதப்படை பிரிவில் பெண் போலீசாக வேலை பார்த்து வந்தார். அப்போது, ஆயுதப்படை காவலர் யூசுப் செரீப் மீது பர்வீனுக்கு காதல் ஏற்பட்டது!

Woman police committed Suicide due to love issue in Tiruppur

இருவரும் இந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இரு வீட்டுக்கும் லவ் மேட்டர் தெரியவந்தது. அதனால ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு இவர்களுக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இதனிடையே நேற்று மாலை பர்வீன் வீட்டிற்கு யூசுப் வந்திருக்கிறார். அப்போது ரெண்டு பேருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்த பர்வீனின் அம்மா இருவரையும் சமாதானம் செய்து வைத்தார். பின்னர், உடனே வெளியே போய்ட்டு வந்துவிடுவதாக சொல்லிவிட்டு பர்வீன் அவசரமாக வெளியே போனார்.

திரும்பவும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்தார். ஆனால் திடீரென பர்வீன் மயக்கமடைந்து சரிந்து விழுந்தார். இதனை பார்த்த அவரது அம்மா அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

ஆனால் பர்வீன் விஷம் சாப்பிட்டு இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இதையடுத்து திருப்பூர் போலீசார் காதலன் யூசுப்பிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+