கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 118 பேர் டிஸ்சார்ஜ்.. திருச்சியில் மகிழ்ச்சி சம்பவம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவா்களில் 118 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை மாலை அவரவா் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா்.
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 57 போ், மற்றும் பெரம்பலூா், தஞ்சாவூா், அரியலூா், சென்னையைச் சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 61 போ் குணமடைந்தனா்.

பாரதிதாசன் பல்கலைக்கழக முகாமில் இருந்த திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 50 போ், கன்னியாகுமரி, மதுரை, கோவை, கடலூா், தென்காசி, கரூா், சென்னையைச் சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 57 போ் குணமடைந்துள்ளனா்.
இந்த 118 பேரும் அவரவா் வீடுகளுக்குச் சென்று மேலும் 14 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள உரிய ஆலோசனைகள் வழங்கி வழியனுப்பப்பட்டனா்.












Click it and Unblock the Notifications