ரயிலை கவிழ்க்க சதி? தண்டவாளத்தில் டயர்.. சந்தேகத்தின் பேரில் 8 பேரை கைது செய்தது தனிப்படை!
திருச்சி : திருச்சி அருகே மேலவாளாடியில் ரயில் தண்டவாளத்தில் 2 லாரி டயர்கள் வைக்கப்பட்டு, விபத்து ஏற்படுத்த முயன்ற விவகாரத்தில் 8 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி - சென்னை ரயில்வே வழித்தடத்தில் லால்குடி அருகே மேலவாளாடியில் கடந்த 1ஆம் தேதி இரவு தண்டவாளத்தில் 2 லாரி டயர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து நள்ளிரவு 1.30 மணியளவில் இந்த வழியாக சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு ரயிலின் வேகத்தைக் குறைத்தார்.

ஆனாலும், ரயில் டயர் மீது மோதியது. நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்த ரயில் தெறித்தது. இதில் படுக்கைவசமாக வைக்கப்பட்டிருந்த டயர் என்ஜின் அடிப்பகுதியில் சிக்கியதால் அங்கு இருந்த வயர்கள் துண்டிக்கப்பட்டு பழுதாகி நின்றது. மேலும் ரயிலின் என்ஜின் உள்பட 4 பெட்டிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 40 நிமிடங்கள் தாமதமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சென்னை புறப்பட்டுச் சென்றது. இதுகுறித்து விருதாச்சலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து தண்டவாளத்தின் குறுக்கே டயர்களை வைத்ததில் சதி செயல் ஏதும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தில் இன்று திருச்சி மாவட்ட எஸ்.பி சுஜித் குமார் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
இந்நிலையில், தனிப்படை போலீசாரின் முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய 8 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையின் மூலம் சதிச்செயலில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு ஜேசிபி ஓட்டுநர் ஒருவர், ரயில்வே கேட்டிற்கு அருகே ரயில்வே லைன் வயர்களை சேதமக்கியதும் இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் பழிவாங்குவதற்காக இந்த விஷம செயலில் ஈடுபட்டிருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications