சமயபுரம் மாரியம்மனுக்கு ஆடியில் அள்ளிக் கொடுத்த பக்தர்கள்.. உண்டியல் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 62 லட்சம் கிடைத்துள்ளது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஸ்ரீரங்கநாதனின் தங்கையாக பக்தர்களால் போற்றப்படுகிறார் சமயபுரம் மாரியம்மன்.
Recommended Video

சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதும், 'வேண்டுபவருக்கு வேண்டும் வரம் அருளும்' அம்மன் அருள்பாலிக்கும் ஸ்தலமாக விளங்குவது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில். திருச்சியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சமயபுரம் என்ற ஊர். இங்குள்ள மாரியம்மன், ஊர் பெயரோடு சேர்த்து சமயபுரம் மாரியம்மன் என்றே அழைக்கப்படுகிறார்.
கண்நோய் தீர்க்கும் சிறப்பு மிக்க தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. வேப்பிலை ஆடை தரிப்பது, தீச்சட்டி ஏந்தி அம்பாளை வழிபடுவது, கண்மலர் வாங்கி காணிக்கை செலுத்துவது போன்றவை, இங்கு முக்கியமான நேர்த்திக்கடன்களாக இருக்கின்றன.

சமயபுரம் மாரியம்மன்
மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் பூச்சொரிதல் விழாவும் அதே போல் சித்திரை மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவும் மிகவும் பிரபலம். ஆண்டு தோறும் சித்திரை மாத முதல் செவ்வாய்க்கிழமையில், தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிப்பதைப் பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

அம்மன் அருள்
சமயபுரம் மாரியம்மன் தன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பவள். தாலிவரம் வேண்டும் பெண்கள் தங்கள் தாலியை நேர்த்திக்கடனாகச் செலுத்துகிறார்கள். ஏராளமான பக்தர்களுக்கு அம்மனுக்கு உண்டியல் காணிக்கையும் செலுத்துகின்றனர்.

பக்தர்கள் காணிக்கை
ஆடி மாதத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் காணிக்கைகளை உண்டியலில் அதிகம் செலுத்தியுள்ளனர். இதுகுறித்து திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தின் சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் இக்கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படும்.

உண்டியல் காணிக்கை
ஆகஸ்ட் 18 தேதி வியாழக்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி தலைமையில் அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர். இதில் திறக்கப்பட்ட 15 உண்டியல்கள் மூலமாக 1.62 கோடி ரொக்கம், 2 கிலோ 748 கிராம் தங்கம், 6 கிலோ 462 கிராம் வெள்ளி, 160 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications