யாருப்பா இது.. வெல்லமண்டி பக்கத்தில்.. திடீரென மைக்கை எடுத்து.. திகைத்து போன திருச்சி.. செம..!
அதிமுக அமைச்சரின் பேத்தி ஜெயலலிதா போலவே வேடமிட்டு வாக்கு சேகரித்தார்
திருச்சி: திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த சிறுமியை கண்டு மக்கள் ஆரவாரம் செய்தனர்.
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சியின் 18ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் திறந்தவேனில் நின்றபடி அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போதுதான், பக்கத்தில் இருந்த அந்த உருவத்தை மக்கள் பார்த்தனர்.. இரண்டு விரல்களையும் காட்டி, அச்சு அசல் ஜெயலலிதாவை போலவே இருந்தார்..!
அதே மாதிரி டிரஸ், அதே மாதிரி கொண்டை, அதே மாதிரி கண்ணாடி என வேனில் நின்று கொண்டிருந்தார்.. திடீரென மைக்கை எடுத்த அந்த குட்டி பெண், "மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்" என்று பேச ஆரம்பித்ததும், கைத்தட்டல்கள் அதிர கேட்டன..
சிறந்த பேச்சாளரை போலவே பேச்சை ஆரம்பித்தார்.. இறுதியில் "அதிமுகவுக்கு இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க" என்று அந்த சிறுமி பேசி முடித்ததும், அவர் யார் என்று தெரிந்து கொள்ள அங்கிருந்த பொதுமக்கள் ஆர்வமானார்கள்.
பிறகுதான் தெரிந்தது அவர் பெயர் சாய் மித்ரா.. 10 வயதாகிறது.. 4-ம் வகுப்பு படிக்கிறாராம்.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் பேத்தி என்பதும், தாத்தாவுக்காக வாக்கு சேகரித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது..
இப்படித்தான் அமைச்சர் விஜயபாஸ்கரின் மகள்களும் விராலிமலையில் அப்பாவுக்காக தொகுதியில் வாக்கு கேட்டு வருகிறார்கள்.. அந்த இரு பிள்ளைகளை போலவே சாய் மித்ராவும் தைரியமாகவும், பயமில்லாமலும் கேஷூலாகவும் பேசி வாக்கு கேட்டு வருவதை தொகுதி மக்கள் வியப்புடன் பார்த்து வருகிறார்கள்.