பாலியல் புகார்கள்.. உண்மையை மூடி மறைக்கக்கூடாது.. பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் விடுத்த எச்சரிக்கை!
திருச்சி : பாலியல் புகார்களை மாணவிகள் தெரிவிக்கும்போது அதை மூடிமறைக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேட்டி அளித்துள்ளார்.
அதே சமயம் காழ்ப்புணர்ச்சி காரணமாக பள்ளிகள் மீது வரும் புகார்களையும் முழுமையாக விசாரித்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி
சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் தெப்பக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சிப் பணிமனையினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அன்பில் மகேஷ் பேட்டி
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி "திருச்சியில் விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தது போல் மற்ற மாவட்டங்களிலும் தொடங்கி வைக்க உள்ளோம். இதில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என தனித்தனியே பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

மாணவர்களின் நலனே முக்கியம்
பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு பிரச்சனைகள் வரும்போது அந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது. இதனால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்பதால் சில பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களின் பிரச்சனையை பெரிதுபடுத்துவதில்லை. அப்படி அஜாக்கிரதையாக இருப்பதால்தான் மாணவர்கள் தற்கொலை போன்ற தவறான முடிவுகள் எடுத்துவிடுகின்றனர்.

பெற்றோரிடம் பேசியிருக்கலாம்
எனவே மாணவர்கள் மனம் விட்டு தங்கள் பிரச்சனையை தெரிவிக்கும்போது, பள்ளி நிர்வாகம் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குறைந்தபட்சம் மாணவியின் பெற்றோரையாவது பள்ளி நிர்வாகம் அழைத்து பேசி இருக்கலாம். எனவே பிரச்சனைகளை மூடி மறைக்க பள்ளி நிர்வாகங்கள் முயற்சி செய்யக்கூடாது.

கடுமையான நடவடிக்கை
அதே சமயம் மாணவர்கள் தரப்பில் இருந்து வரும் எல்லா புகார்களையும் அப்படியே நம்பிவிடாமல் முழுமையாக விசாரித்த பின்னரே பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்குக் காரணம் காழ்ப்புணர்ச்சியால் புகார்கள் வந்திருந்தால் தேவையில்லாமல் பள்ளியின் பெயர் பாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான். அதே சமயம் பள்ளியில் குழந்தைகள் மீது பாலியல் சீண்டல்கள் இருக்கும் பட்சத்தில் போக்சோ மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த அரசு மிக கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
Recommended Video

கட்டணம் நிர்பந்தித்து வசூலிக்கக் கூடாது
சில தனியார் பள்ளிகள் ஒரு ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்துமாறு பெற்றோரை நிர்பந்திப்பதாக புகார்கள் வருகிறது. இதுபோன்று நிர்பந்தித்து கல்விக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என நீதிமன்றமே தெரிவித்து உள்ளது. இந்த புகார்கள் மீது முகாந்திரம் இருந்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications