ஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினி நினைப்புதான்.. வந்துருவாரோன்னு.. அர்ஜூன் சம்பத் கிண்டல்!
ரஜினி கட்டாயம் அரசியலுக்கு வருகிறார் என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்
Recommended Video
திருச்சி: ஸ்டாலினுக்கு தூக்கத்தில்கூட ரஜினி நினைப்புதான்.. நீங்க வேணும்னா பாருங்க.. வர்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி தனித்து போட்டியிடுவார்.. ஸ்டாலினை தோற்கடிப்பார்.. ஆன்மீக அரசியல்தான்" என்று இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இதோ, அதோ என்ற ரஜினியின் அரசியல் வருகையை தமிழகமே எதிர்பார்த்து சோர்ந்து போய்விட்ட நிலையில், அடிக்கடி வந்து அதனை நினைவூட்டி போவதில் ஒருவர் அர்ஜூன் சம்பத். நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவாளர் என சொல்லப்படுவர்.
"எனது கணிப்புப்படி ரஜினி அரசியலுக்கு கண்டிப்பாக வருவார். அவர் அரசியலுக்கு வந்தால் நாங்கள் துணை நிற்போம். மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்குவோம். எங்கள் ஆதரவு அவருக்குத்தான்... அரசியலுக்குள் வருவதற்கு நடிகர் ரஜினிகாந்த் தயங்கிய காலம் மலையேறிவிட்டதாகவும் அடுத்து சிங்கம் போல அவர் சிங்கிளாக அரசிலுக்கு நுழையப் போகிறார்" இப்படியெல்லாம் கடந்த காலங்களிலும், இப்போதும் பேசி வருபவர் அர்ஜுன் சம்பத்.

ரஜினி
இப்போது மீண்டும் அதே கருத்தை அழுத்தமாக வலியுறுத்தி உள்ளார். ஆனால் இந்த முறை ஸ்டாலினை அட்டாக் செய்து ரஜினியின் அரசியல் வருகையை கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத் சொன்னதாவது:

இந்தி
"தமிழ்நாட்டில் இந்திப் படிக்க விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தக்கூடிய, ஸ்டாலின் மகன் நடத்தக்கூடிய, ஸ்டாலின் மருமகன் நடத்தக்கூடிய ஸ்கூல்களில் இந்தி இருக்கு.

வியாபாரம்
ஸ்கூல் நடத்துறீங்க. உங்க பேரன் பேத்திங்க எல்லாம் இந்தி படிச்சிக்கிறாங்க.. எத்தனை நாளைக்கு தமிழ்லேயே வியாபாரம் பண்ணுவீங்க.. அதை எதிர்த்து நாங்க போராட்டம் நடத்த போறதா சொன்னோம். ஆனா, இதை அறிந்த ஸ்டாலின் பின் வாங்கிவிட்டார்.

ரஜினி
இந்தி மொழி விஷயத்தில் நடிகர் ரஜினி தெளிவா தன் கருத்தை சொல்லிட்டார். அவர் கட்டாயம் அரசியலுக்கு வர்றாரு.. ஆன்மீக அரசியல்.. வர்ற சட்டமன்ற தேர்தலில் ரஜினி தனித்து போட்டியிடுவார். எங்க கூடவெல்லாம் கூட்டணி வெக்கணும்னு இல்லை.. தனியா நிப்பாரு.. ஆட்சியை பிடிப்பாரு.. ஸ்டாலினை தோற்கடிப்பார்.. அதுக்குதான் திமுகவில "ரஜினி வர்றாரா.. ரஜினி வர்றாரா"ன்னு பயந்துட்டே இருக்காங்க. ஸ்டாலினுக்கு தூக்கத்தில்கூட ரஜினி நினைப்புதான்" என்றார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications