தமிழகத்தில் தாமரை அல்ல, ஒரு புல் கூட முளைக்காது.. திருச்சியில் அதிரடி காட்டிய ஸ்டாலின்!
தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட முளைக்கவில்லை, எப்படி தாமரை மலரும் என்று பாஜகவை குற்றஞ்சாட்டி திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
Recommended Video

திருச்சி: தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட முளைக்கவில்லை, எப்படி தாமரை மலரும் என்று பாஜகவை குற்றஞ்சாட்டி திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மேகதாது அணைக்கு எதிராக திமுக தனது தோழமை கட்சிகளுடன் போராட்டம் நடத்தி வருகிறது. திருச்சியில் நடக்கும் இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி இருக்கிறார்கள் .
திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் தமிழக மற்றும் மத்திய அரசை குற்றம்சாட்டி ஸ்டாலின் பேசியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேகதாது குறித்து விவாதிக்க சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் கூட்ட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

காவிரி அருமை
அவர் தனது பேச்சில், காவிரி கர்நாடகாவில் உற்பத்தியானாலும், அது தமிழகத்தில்தான் அதிகம் பாய்கிறது. இது பெரிய வரம். ஆனால் இதை தடுக்க மத்திய அரசுடன் சேர்ந்து கர்நாடக அரசு சதி செய்து வருகிறது. மேகதாது அணைக்கட்டினால் தமிழகத்திற்கு காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் வராது.

மேகதாது விவகாரம்
மேகதாது விவகாரத்தில் தேர்தலுக்காகவோ, அரசியலுக்காகவோ போராடவில்லை. காவிரியை தடுக்கும் பணிகளில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு நிச்சயம் தண்ணீர் வராது. தமிழக விவசாயமே நாசம் அடையும்.

மத்திய அரசின் செயல்
தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்பது தெரிந்ததால், கர்நாடகா மீது அவர்களுக்கு பாசம். குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது பாஜக. கஜா புயல் போன்ற பேரிடர் வேறு மாநிலத்தில் நிகழ்ந்திருந்தால், பிரதமர் நேரில் சென்று பார்த்திருக்கமாட்டாரா?. இயற்கை இடர்பாட்டை ஏற்றுக்கொள்ளலாம், மேகதாது போன்ற மத்திய அரசின் செயற்கை இடர்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

தாமரை மலராது
மேகதாது பிரச்சனைக்கு முழு காரணம் தமிழக அரசும், மத்திய அரசும் தான். கஜா நிவாரணம் தராத மத்திய அரசுக்கு தமிழக மக்கள் ஏன் வரி செலுத்த வேண்டும். தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட வளராத நிலையில், தாமரை எப்படி மலரும்.

தடை இல்லை
ஏற்கனவே திமுக இது சார்பாக மத்திய அமைச்சர்களை சந்தித்தோம். ஆனால் பலன் கிடைக்கவில்லை. இதில் அதிமுக இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த திட்டத்திற்கு தமிழக அரசால் தடை உத்தரவை கூட பெற முடியவில்லை. தமிழக அரசு அந்த அளவிற்கு செயலற்று இருக்கிறது என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications