ஆஹா.. நாளை முதல்.. இலவச உணவு.. திருச்சி மாவட்டத்தில் 17 இடங்களில்.. ஆதரவற்றவர்கள் சாப்பிடலாம்
திருச்சி: ஆதரவற்றோர்களுக்கு உணவளிக்கும் வகையில் திருச்சி மாவட்டத்தில் 17 சமுதாய சமையல் கூடங்கள் நாளைமுதல் செயல்படும் என்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த பின் மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று காலை நடந்தது. இதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் ஆய்வுசெய்தனர். பின்னர் பல்வேறு பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்களிடம் உங்களை முதலில் பாதுகாக்க நீங்கள் அனைவரும் முகத்தை மூடி பணிகள் செய்யுமாறு அறிவுரை கூறினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது : ''நேற்று இரவு 10 மணிவரை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்து போக்குவரத்து இருந்தது. இதையடுத்து இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கி முழு அளவில் நடைபெற்றுவருகிறது.
50 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு எளிதாக நோய்த்தொற்று ஏற்படும் என்பதால், அவர்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காககூட வெளியில் வரக் கூடாது. இந்த நோயைக் கண்டு அச்சப்பட வேண்டிய தேவையில்லை.

தற்போது கொரோனாவுக்கான ரத்த பரிசோதனை மையம் திருச்சி அரசு மருத்துவமனையிலேயே நடைபெறுகிறது. அதனால் கடந்த 10 நாள்களுக்கு முன்பு வெளிநாடுகள் சென்று வந்தவர்களிடம் பொதுமக்கள் யாரேனும் நெருங்கிப் பழகியிருந்தால் உடனடியாக 1077 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனைகள் பெறலாம். அவர்கள் எந்த மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும், என்ன பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்படும்.
வீடுகள் இல்லாதவர்கள், ஆதரவற்றோர்களுக்கு உணவளிக்கும் வகையில் சமுதாய சமையல் கூடங்கள் திருச்சி மாநகரில் மூன்று இடங்களிலும், புறநகரில் 14 ஒன்றியங்களிலும் அமைக்கப்படுகின்றன. இந்தச் சமையல் கூடங்கள் நாளை முதல் செயல்படும்''. திருச்சியில் மாலை முதல் டீக்கடைகள் அடைக்கப்படும். பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications