தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம்
திருச்சி: ''குறிப்பிட்ட நேரம் தான் நல்ல நேரம் என்று ஜோசியக்காரர் குறித்து கொடுத்த நேரத்தில் தான் திருமணத்தை நடத்துகிறார்கள். ஆனால் அண்மையில் கூட ஒரு ஜோசியக்காரருக்கு ஏற்பட்ட நிலைமை அனைவருக்குமே தெரியும். முதல் நாள் அரசு பதவி கொடுக்கப்பட்டு, மறுநாளே நீக்கப்பட்டார். ஒரு ஜோசியக்காரருக்கு அவர் நேரத்தையே அவரால் சரியாக கணிக்க முடியவில்லை. ஆனால் அவரின் வழிகாட்டுதலின்படி தான் முதல்வர் விஜய் நடப்பதாக கேள்விப்பட்டேன்'' என்று தவெகவிற்கு ஆதரவு வழங்கி வரும் மாநில செயலாளர் சண்முகம் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் ஆதரவு வழங்கி வருகின்றன. இவர்கள் தவெகவுடன் கூட்டணி அமைக்காமல் வெளியில் இருந்து ஆதரவு வழங்கி வருகின்றன. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் தான் முதல்வர் விஜய் ஜோதிடத்தை நம்புவதையும், அவரது ஜோதிடருக்கு பதவி வழங்கியதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்.
அதாவது திருச்சி மாவட்டம் முசிறியில் நடந்த திருமண விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அதன்பிறகு திருமண விழாவில் சண்முகம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
''குறிப்பிட்ட நேரம் தான் நல்ல நேரம் என்று ஜோசியக்கரர் குறித்து கொடுத்த நேரத்தில் தான் திருமணத்தை நடத்துகிறர்கள். ஆனால் அண்மையில் கூட ஒரு ஜோசியக்காரருக்கு ஏற்பட்ட நிலைமை அனைவருக்குமே தெரியும். முதல் நாள் அரசு பதவி கொடுக்கப்பட்டு, மறுநாளே நீக்கப்பட்டார். ஒரு ஜோசியக்காரருக்கு அவர் நேரத்தையே அவரால் சரியாக கணிக்க முடியவில்லை. ஆனால் அவரின் வழிகாட்டுதலின்படி தான் முதல்வர் விஜய் நடப்பதாக கேள்விப்பட்டேன்'' என்று அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்த கருத்துக்கு பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராக ரிக்கி ரத்தன் பண்டித் வெற்றிவேல் உள்ளார். இவர் சொல்வதை விஜய் அப்படியே நம்பி வருகிறார். தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு விஜய் தனது அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டித் வெற்றிவேலை நியமனம் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும் தமிழக சட்டசபையில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். இதையடுத்து விஜய் தனது ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டித்திற்கு வழங்கிய பதவியை ரத்து செய்தார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ சண்முகம் வரவேற்றார். அதன்பிறகு விஜய், ஜோதிடர் சொல்படி நடப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications