எதிரி வெளியே என்றால் தலையை சீவியிருப்பேன்.. திவாகரன் திடீர் ஆவேசம்!
Recommended Video
திருச்சி: "சசிகலாவை வீழ்த்த எதிரி வெளியில் இருந்து வந்திருந்தால்.. நான் தலையை சீவியிருப்பேன். ஆனால் குடும்பத்துக்கு உள்ளேயே எதிரி என்பதால் நான் கையை பிசைந்து கொண்டிருக்கிறேன்.. சசிகலா ஜெயிலில் இருந்து வெளியே வந்துவிடக்கூடாது என்றே தினகரன் நினைக்கிறார்.. அவரை தனிமைப்படுத்தினால்தான் அதிமுகவை ஒன்றிணைக்க முடியும்" என்று திவாகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா இறந்த பிறகு.. தினகரனுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அம்மா அணி என்கிற பெயரில் செயல்பட்டு வந்த திவாகரன், அம்மா அணியை "அண்ணா திராவிடர் கழகம்" என்று தனிக்கட்சியை தொடங்கினார்.
இதையடுத்து பெரிய அளவில் இந்த கட்சியின் தாக்கம் இல்லாவிட்டாலும், சகோதரி சசிகலா மீது ஆழ்ந்த பற்றை உடையவர். அவர் மீது எந்த அளவுக்கு பற்றும், மரியாதையும் உள்ளதோ அதே அளவுக்கு தினகரன் மீது அதிருப்தியை உடையவர்.

சசிகலா
இந்நிலையில், திருச்சியில் அண்ணா திராவிடர் கழகத்தின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதாக கூறினார். பின்னர், டிடிவி தினகரனை சரமாரியாக சாடி விமர்சித்தார். அப்போது அவர் சொன்னதாவது:

எதிரி
"சசிகலா என் சகோதரி என்ற முறையில் அவரை காப்பாற்றவேண்டும். அவரை மீட்க வழியில்லாமல் இல்லை. ஆனால் அவர் அதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும். சசிகலாவை வீழ்த்த எதிரி வெளியில் இருந்து வந்திருந்தால் நான் தலையை சீவியிருப்பேன். ஆனால் குடும்பத்துக்கு உள்ளேயே உறவினர் எதிரி என்பதால் கையை பிசைந்து கொண்டிருக்கிறேன்.

குழப்பம்
அமமுக ஆண்டிகள் கூடி கட்டிய மடம் போன்றது. செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் வரிசையில் இப்போது புகழேந்தி. எடப்பாடி எனக்கு பணம் கொடுத்து அமமுகவில் குழப்பம் ஏற்படுத்த செய்வதாக கூறுவது கையாளாகாத குற்றச்சாட்டு. எனக்கு பணம் கொடுக்க இதுவரை யாரும் பிறந்து வரவில்லை.

தனிமை
அதிமுகவை ஒருங்கிணைக்க தினகரன் தடையாக உள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வரக்கூடாது என்று தினகரன் நினைக்கிறார். தினகரனுக்கு மக்கள் செல்வாக்கு எப்படி உள்ளது என்பதை கடந்த தேர்தலில் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. தினகரன் தனிமைப்படுத்தப்பட்டால்தான் அதிமுக ஒன்றிணையும்.

ஜெயலலிதா
சசிகலா சிறைக்கு செல்லும் முன்பு 133 எம்எல்ஏக்கள், ஒரு கேபினட், துணை பொதுச்செயலாளர் பதவியோடு தான் தினகரனிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டு சென்றார் சசிகலா. ஆனால் இன்று என்ன வைத்திருக்கிறார். இப்போது இருப்பது ஜெயலலிதா காலத்து அதிமுக அல்ல. நிறைய விஷயங்களை அதிமுக தலைமையில் இருப்பவர்கள் சமரசம் செய்து கொள்கின்றனர்.

சுயமரியாதை
தமிழக நலனை பாதிக்க கூடிய விஷயங்களை கூட புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதை அப்படியே செயல்படுத்த வேண்டும் அல்லது ஆதரிக்கவேண்டும் என்று நினைக்கின்றனர். ஆட்சியாளர்கள் நிலைமை தாழ்ந்து போய்விட்டது. சுயமரியாதை எங்கே இருக்கிறது? ஆட்சியை மட்டும் எடப்பாடி பழனிசாமி கட்டுபாட்டில் வைத்திருக்கிறார். கட்சியை கட்டுபாட்டில் வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை" என்றார்.
-
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications