இந்த 3 விஷயம்தான் எனக்கு அங்கே பிடிக்கல.. அதான் வந்துட்டேன்.. பாரிவேந்தர்
Recommended Video

திருச்சி: "போக கூடாத இடத்துல போய் சேர்ந்துட்டேன்.. ஆனா இந்த 3 விஷயத்துக்காகத்தான் அங்கிருந்து வெளியே வந்துட்டேன்" என்று பாஜக குறித்து ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர் வெளிப்படையாக காரணங்களை அடுக்கி உள்ளார்.
கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தவர் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர். ஆனால் சில காலமாகவே அக்கட்சியிலிருந்து விலகியே இருந்தார். பாஜகவின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றும், மரியாதை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் இணைந்து பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். நேற்று முசிறி பகுதியில் இவரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலினும் பிரச்சாரம் செய்தார். அந்த கூட்டத்தில் பாரிவேந்தர் சில விஷயங்களை மனம் விட்டு பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:

மாயை
"பெரம்பலூர் எனக்கு புதிய ஊர் அல்ல. எனது மூதாதையர் வாழ்ந்த ஊர். நான் போக கூடாத இடத்திற்கு போய் சேர்ந்தேன். அந்த இடத்தில் நான் எதிர்பார்த்தது எதுவுமே நடக்கவில்லை. தாய், தந்தையை மறந்து விட்டு, ஏதோ ஒரு மாயை நம்பி சென்று விட்டேன்.

குறுசிறு வேலைகள்
ஏன் கால தாமதமாக வந்தேன் என்றால் 2 ஆண்டுகள் நல்லது ஏதாவது செய்வார்களா என்று காத்திருந்தேன். இந்திய சுதந்திரத்தை எப்படி ஒரு நாள் இரவு பெற்றோமோ, அதே போல 2016 பணம் மதிப்பிழப்பு காரணமாக நம்மை எல்லாம் சுதந்திரத்தை இழக்க செய்து விட்டது. மேலும் 2017 ஆண்டு ஜிஎஸ்டி வரி விதித்து இளைஞர்கள் செய்த குறுசிறுவேலையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

4 மாவட்டங்கள்
2018 தமிழ்நாட்டிலே 4 மாவட்டங்களில் கஜா புயல் தாக்கியபோது திமுக தலைவர் ஸ்டாலின் ஓடோடி வந்து நிவாரணம் கொடுத்தார். நானும் என் தரப்பில் இருந்து அந்த பகுதியில் இருந்து என்னுடைய கல்வி நிறுவனங்களில் படிக்கும் சுமார் 650 மாணவர்களுக்கு 4 ஆண்டுகள் கல்வி கட்டணத்தை ரத்து செய்தேன். ரத்து செய்த கல்வி கட்டணத்தின் மதிப்பு 48 கோடி ஆகும்.

மக்களுக்கு பாதிப்பு
ஆனால் மத்திய அரசு இந்த கஜா புயலை குறித்து எந்த நிவாரணமும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த 3 காரணங்களே அந்த கூட்டணியில் இருந்து வெளியே வருவதற்கு காரணம். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதை தள்ளிப்போட கூடாது. தள்ளிப்போட்டால் மக்களுக்கு தான் பாதிப்பு" என்றார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications