"45 ஆண்டுகளுக்கு மேலாக சமூக பணிகள்.." துபாய் ஈமான் அமைப்பிற்கு துபாய் இந்திய துணை தூதர் பாராட்டு
திருச்சி: சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாகத் துபாய் ஈமான் அமைப்பு சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்குத் துபாய் இந்தியத் துணை தூதர் பாராட்டு தெரிவித்தார். துபாய் ஈமான் அமைப்பு 1976ல் இருந்து துபாயில் சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளுக்குச் செல்வது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. படிப்பு வேலைவாய்ப்பு என பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர்.

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐக்கிய அமீரகம், சவுதி உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் அதிகம் செல்கிறார்கள். குறிப்பாக ஐக்கிய அமீரகத்தில் இந்தியர்கள் அதிகம் உள்ளனர்.
இதற்கிடையே துபாய் இந்தியத் துணை தூதர் சதீஷ் குமார் சிவனை ஈமான் பொருளாளரும் ,பிளாக் துலிப் நிறுவனத்தின் சேர்மனுமான யஹ்யா, பிளாக் துளிப் இம்ரான் மற்றும் ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் ஆகியோர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது துபாய் இந்தியத் துணை தூதரகத்தின் பல்வேறு சிறப்பான சேவைகளுக்கு ஈமான் சார்பில் நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக ஈமான் பொருளாளர் யஹ்யா இந்தியத் துணை தூதரிடம் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், துபாய் ஈமான் அமைப்பு 1976ல் இருந்து துபாயில் சமூக நலன் பணிகளில் ஈமான் அமைப்பு ஈடுபட்டு வருவதையும் மேலும் சமூகப் பணிகளுக்குத் துபாய் ஈமான் அமைப்பு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது துபாய் ஈமான் அமைப்பின் சமூக நலப் பணிகளுக்கு இந்தியத் துணை தூதர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications